மும்பை: 2014ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு நேர்முக தேர்வுகள் ஐஐடி கல்லூரிகளில் திங்கட்கிழமை துவங்கியது. இவ்வருடம் ஐஐடி மாணவர்களுக்கு 15-20 சதவீதம் அதிக வேலைவாய்ப்புகள், சராசரி சம்பளத்தைவிட 10-20 சதவீதம் அதிகமான சம்பளம் மற்றும் 30 சதவீதம் அதிகமான வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளது.
நேர்முக தேர்வு துவங்கி 20 மணிநேரத்தில் பேஸ்புக் நிறுவனம் 1.55 கோடி சம்பளம் போனஸ் மற்றும் நிறுவன பங்குகளுடன் அமெரிக்காவில் வேலை செய்ய நியமன ஆணையை வழங்கியுள்ளது.
உயரிய சம்பளம்
இதுவே ஐஐடி கல்லூரிகளில் கொடுக்கப்பட்ட அதிகப்படியான சம்பளம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐஐடி காரக்பூர் மற்றும் பாம்பே
பேஸ்புக் நிறுவனத்தின் கலிபோர்னியா அலுவலகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிய ஐஐடி காரக்பூர் கல்லூரியில் இருந்து 3 பேரும், ஐஐடி கல்லூரி மாணவர்களில் சிலரும் பேஸ்புக் தேர்ந்தெடுத்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதுகுறித்து எவ்விதமான கருத்தும் பேஸ்புக் வெளியிடவில்லை.
பிற நிறுவனங்கள்
பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து சாம்சங் ரூ.93 இலட்சம், மைக்ரோசாப்ட் ரூ.80 இலட்சம், ஆரக்கிள் ரூ.78 இலட்சம் மற்றும் நிறுவன பங்குகள், கூகிள் ரூ.78 இலட்சம் மற்றும் விசா நிறுவனம் ரூ.87 இலட்சம் அளவில் சம்பளத்தை அளித்து ஐஐடி மாணவர்களை தங்களது நிறுவனங்களில் இணைத்துள்ளது.
77.5 இலட்சம் ரூபாய்
கடந்த வருடம் ஐஐடி புவனேஸ்வர் மாணவருக்கு அதிகப்படியாக 77.5 இலட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளது ஒரு பன்னாட்டு நிறுவனம், இவ்வருடம் ஐஐடி கல்லூரிகளில் சம்பளம் 36 சதவீதம் உயர்ந்து 1.55 கோடி ரூபாயாக உள்ளது.
இரண்டாம் கட்ட வேலைவாய்ப்புகள்
மேலும் ஐஐடி கல்லூரிகளில் இரண்டாம் கட்ட வேலை வாய்ப்புகளுக்கான நேர்முக தேர்வு ஐனவரி மாதம் துவங்க உள்ளது. இது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வரை தொடரும்.
முதல் 20 நாள்
கடந்த வருடம் முதல் 20 நாட்களில் 1000 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தது. இவ்வருடம் இதேக்காலகட்டத்தில் 1200 பேருக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிகிறது.
100 நிறுவனங்கள்
ஐஐடி மாணவர்களை தங்களது நிறுவனத்தில் சேர்த்துக்கொள்ள 100க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் காத்துக்கிடக்கிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications