டெல்லி: மத்திய அரசு வர்த்தகம் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு இருக்கும் வரி சட்டங்கள் சம்மந்தமான குழப்பங்களை தீர்க்க உயர் மட்ட குழுவை நியமித்துள்ளது. இக்குழு அமைப்பதன் மூலம் விரி செலுத்துவதில் இருக்கும் குழப்பங்கள் விரைவில் களையப்பட்டு வரி செலுத்துவோர் மத்தியில் புதிய நம்பிக்கை உருவாக்கும்.
உயர் மட்ட குழு
இக்குழுவை தலைமை பொருளாதார ஆலோசகர் அசோக் லஹ்ரி தலைமைவகிப்பார். மேலும் இக்குழுவில் வருமான மற்றும் சொத்து வரித்துறையின் முன்னாள் அதிகாரியான சித்தார்த்தா பிரதான் மற்றும் சுங்க மற்றும் மத்திய கலால் வரித்துறையின் முன்னாள் இயக்குனர் ஜெனரல் கெளதம் ரே ஆகியோர் உள்ளனர்.
அருண் ஜேட்லி
மேலும் இக்குழு அரையாண்டு ஆய்வு அறிக்கையை மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சாரான அருண் ஜேட்லியிடம் சமர்ப்பிக்கப்படும்.
பட்ஜெட்
2014-15ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தக்கல் செய்யும்போது, வர்த்தக மற்றும் தொழில்துறைகளுக்கான வரி சட்டங்களில் உள்ள பிரச்சனைகள் மற்றும் குழப்பங்களை களை உயர் மட்ட குழுவை அமைக்கப்படும் என தெவித்தார்.
வரி வசூல்
மத்திய அரசு வரி வசூல் அளவை அதிகரிக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று, இக்குழு அமைப்பதன் மூலம் இந்திய நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் இந்தியாவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களும் வரி சம்மந்தமான பிரச்சனைகளில் இருந்து தெளிவுறை பெறும்.
இரு முனை கருத்துகள்
மேலும் இக்குழுவிற்கு மத்திய நேரடி வரித்துறை மற்றும் மத்திய சுங்க மற்றும் கலால் வரித்துறையின் அறிவுறைகள் பெறு செயல்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.