இனி வங்கி பரிமாற்றத்திலும் வரி வதிக்கப்படும்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் கருப்பு பணத்தின் புழக்கத்தை தடுக்க வங்கியில் ஒரு நாளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு வரி விதிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்தின் உயர்மட்ட குழு தெரிவித்துள்ளது.

மேலும் இப்பரிந்துரையை காங்கிரஸ் அரசு நியமிக்கப்பட்ட பார்த்தசாரதி சோம் குழு அளித்துள்ளது, இதேபோல் இதில் அதிக நிலங்களை வைத்துவர்களிடமும் அதிகளவிலான வரி வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இனி வங்கி பரிமாற்றத்திலும் வரி வதிக்கப்படும்!!

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரம், உள்நாட்டிலும் கருப்பு பண பதுக்கலை தடுக்கவும் அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், வங்கிகளில் ஒரே நாளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் எடுத்தால் அந்த தொகைக்கு வரி விதிக்கலாம் என்று உயர்நிலை ஆலோசனைக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருக்கிறது.

ஆனால் இக்குழுவின் அனைத்து பரிந்துறைகளும் இதுநாள் வரை ஆய்வு செய்யப்பட்டு மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் விவசாயிகளின் வருமானம் 5 லட்சம் வரை வரி விலக்காகவும், அதற்குமேல் வருமான பெறும் அனைவருக்கும் கட்டாய வரி விதிக்கவும் இக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Revive banking transaction tax to curb black money: Panel

A high level official panel today proposed levying of banking transaction tax on withdrawal of cash beyond a specified limit in a day to check black money and was not in favour tax amnesty scheme.
Story first published: Thursday, December 4, 2014, 16:56 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X