டெல்லி: இந்தியாவில் ஏற்கனவே பல விமான போக்குவரத்து நிறுவனங்கள் இருக்கும் நிலையில், டாடா குழுமம் பெரும் முதலீட்டுடன் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விஸ்தாரா என்னும் உலகளாவிய புதிய விமான சேவை நிறுவனத்தை துவக்கியுள்ளது. இக்கூட்டணி இந்நியாவில் விமான நிறுவனத்தை துவங்க அனைத்த விதிமான ஒப்புதல்களும் பெற்றுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி கூறுகையில் விஸ்தாரா நிறுவனம் டிசம்பர் மாத இறுதியில் அல்லது 2015ஆம் ஆண்டு துவக்கத்தில் முழுமையாக செயல்பட துவங்கும் என தெரிவித்தார்.
சோதனையில் உள்ளது விஸ்தாரா...
இந்நிறுவனம் இந்திய வானில் பறப்பதற்கு சில முக்கிய உரிமங்கள் பெற சோதனையில் உட்படுத்தப்பட்டு உள்ளது. இதன் படி இந்தியாவில் 5 வருமானம் இல்லாத வழித்தடங்களில் 10 மணி நேர பயணத்திலும், பயணிகளின் அவசர கால வெளியேற்றம் போன்ற நடவடிக்கைகளை சோதனை செய்து வருகிறது.
விஸ்தாரா
விமான சேவை துவக்கம் குறித்து இந்நிறுவனம் கூறுகையில், நிறுவனம் இந்தியா வானில் பறப்பதற்கான இறுதிகட்ட ஒப்புதல்களை பெறும் நிலையில் உள்ளது. மேலும் ஒப்புதல்கள் கிடைத்த ஒரு வாரக்காலத்தில் முழுமையான சேவையை துவங்க தயாராக உள்ளோம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு வருட காலம்
டாடா குரூப் நிறுவனம் ஒரு வருடத்திற்கு முன் இந்திய மற்றும் உலகலவில் விமான போக்குவரத்து சந்தையை கைபற்ற சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்தது குறிப்பிடதக்கது.
ஏர்ஏசியா
உலக சந்தைகளை கைபற்ற சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் நிறுவனத்துடனும், உள்நட்டு சந்தையை கைபற்ற மலேசியாவின் ஏர்ஏசியா நிறுவனத்துடன் இணைந்தது.
தலைமையகம்
மேலும் விஸ்தாரா நிறுவன பிற நிறுவனங்களை போல மும்பை, பெங்களுரூ போன்ற நகரங்களை தேர்ந்தெடுக்காமல், டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட உள்ளது.
ஏர்பஸ் 320
முதற்கட்டமாக இந்நிறுவனம் ஒரேஒரு ஏர்பஸ் 320 விமானத்தை கொண்டு செயல்பட உள்ளது. அடுத்த சில மாதங்களில் இதை 5ஆக உயர்ந்த திட்டமிட்டுள்ளது விஸ்தாரா.
விஸ்தாரா-வுக்கு போட்டி
இந்த புதிய நிறுவனத்திற்கு இத்துறையின் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா மிகப்பெரிய போட்டியாக இருக்கும். மேலும் ஜெட் ஏர்வேஸ் அதேநாளில் ஏதிஹாட் நிறுவனத்துடன் இணைந்துள்ளதால் விஸ்தாரா-வுக்கு போட்டு கடுமையாக இருக்கும்.
பங்கீடு
இந்த நிறுவனத்தின் டாடா சன்ஸ் நிறுவனம 51 சதவீதமும், மீதமுள்ளவை சிங்கப்பூர் நிறுவனம் வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சேவை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து துவங்குகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications