பெங்களுரூ: இந்தியாவில் மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பில் சில நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறது, இதில் முதன்மையானவை ஹெச்சிஎல் நிறுவனம். இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமான, ஆதாவது வன்பொருள் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பில் ஈடுப்பட்டுள்ள ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஹர்ஷவர்த்தன் மாதவ் சிட்லே பதவி விலகினார்.
டிசம்பர் 31ஆம் தேதி முதல் இவர் ஹெச்சிஎல் இன்போசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்தும், நிர்வாக உயர் மட்ட குழுவில் இருந்தும் வெளியேறுவதாக இந்நிறுவனம் மும்பை பங்கு சந்தைக்கும் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் புதிய நிர்வாக இயக்குநராக இந்நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் துணை தலைவரான பிரேம்குமார் சேஷாத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரேம்குமார் அவர்களின் நியமனம் ஜனவரி 1, 2015ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவர் இந்நிறுவனத்தின் துணை தலைவராக கடந்த செப்டம்பர் மாதத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.