டெல்லி: மொபைல் உலகில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு பிறகு காப்புரிமை பிரச்சனைகளில் தற்போது ஜியோமி மற்றும் எரிக்சன் சிக்கியுள்ளது. எரிக்சன் நிறுவனம் ஜியோமி நிறுவனத்திற்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தது. இதனால் இந்தியாவில் ஜியோமி மொபைல் போன்களை விற்க இடைகால தடையை சில வாரங்களுக்கு முன்பு டெல்லி உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இவ்வழக்கின் மேல்முறையீட்டில் இத்தடையை உறுதி செய்தது நீதிமன்றம். இத்தடை ஜியோமி நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுப்பட்டுள்ள பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இத்தடை பொருந்தும்.
விற்பனை பாதிப்பு
இத்தடையினால் ஜியோமி நிறுவனத்தின் விற்பனை அளவு அதிகளவில் பாதிக்கும், அதேபோல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகமும் குறையும். இதே காப்புரிமை பிரச்சனையில் மொபைல் உலகின் ஜாம்பவான் என போற்றப்படும் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை சரி பாதியாக குறைந்தது மறுக்க முடியாத ஒன்று.
எரிக்சன் வழக்கு
ஜியோமி நிறுவனம் மொபைல் போன் தயாரிப்பு, ஒருங்கிணைப்பதில், இறக்குமதி அல்லது விற்பனை யுக்தி என அனைத்திலும் எரிக்சன் நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற முறையில் செய்து வருவதாக எரிக்சன் நிறுவனம் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஜியோமி
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பே களமிறங்கிய ஜியோமி நிறுவனம், பிளிப்கார்ட் நிறுவனத்தின் உதவியுடன் நாட்டின் இலட்சக்கனக்கான போன்களை விற்பனை செய்து குறிப்பிடத்தகும் அளவிற்கு வாடிக்கையாளர்களை கவர்ந்தது.
இறக்குமதி
இந்த தடைக்கு இனங்க நீதிபதி ஜி.பி.மிட்டல் சுங்கத்துறையை ஜியோமி போன் இறக்குமதியை தடுக்க உத்திரவிட்டுள்ளது. மேலும் இதற்கு இடையில் ஏதேனும் இறக்குமதி செய்யப்பட்டால் எரிக்சன் நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் அளிக்கும் படியும் சுங்கத்துறைக்கு உத்திரவிட்டுள்ளது நீதிமன்றம்.
விபரங்கள்
மேலும் நீதிமன்றம் இந்தியாவில் ஜியோமி மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இதுவரை எத்தனை ஏஎம்ஆர், எட்ஜ் மற்றும் 3ஜி போன்களை விற்றுள்ளது என்ற தகவல்களை உடனடியாக சமர்ப்பிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது.
அவசர குழு
நீதிமன்றம் ஜியோமி தயாரிப்புகளின் விற்பனையை தடுக்க அவசர குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு ஜியோமி மற்றும் பிளிப்கார்டி மற்றும் அதன் கிடங்குகளை ஆய்வு செய்து தயாரிப்புகள் மற்றும் ஆவணங்களை சேகரிக்கவும், சீல் வைக்கவும் சென்றுள்ளது. இக்குழு அடுத்த 4 வாரத்தில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவு அறிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications