டெல்லி: ரஷ்யா அரசின் அணு உலை மின்சார உற்பத்தி நிறுவனமான ரோசடாம்-இன் உதவியுடன் இந்தியாவில் அடுத்த 20 வருடங்களில் 12 அணு உலைகளை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளது இந்தியா.
இந்தியாவில் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் இம்முயற்சி மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இதற்கான ஒப்பந்தத்தை டெல்லியில் வியாழக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் இரு நாட்டு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.
கூடங்குளம்
இந்தியாவில் ஏற்கனவே ரஷ்ய உதவியுடன் உருவாக்கப்பட்ட 1,000 மொகவாட் சக்திக் கொண்ட அணு உலை கூடங்குளத்தில் அமைத்து செயல்பட்டு வருகிறது. அடுத்த அணு உலை 2015ஆம் ஆண்டு துவங்க உள்ளது.
விளாடிமிர் புட்டின்
மேலும் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் ரோசடாம் நிறுவனத்திடம் அணு உலை எண்ணிக்கையை 25ஆக உயர்வும் அதற்கான அனைத்து விதமான உதவிகளும் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
12 அணு உலைகள்
தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ல 12 அணு உலைகளி 6 உலகள் கூடங்குளம் அருகில் அமைக்கப்பட உள்ளது. மீதமுள்ள 6 உலைகள அமைக்க மத்திய அரசு இடங்களை தேடிவருகிறது.
ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா
இந்தியாவில் அணு உலை அமைப்பதற்கும், அதற்கு தேவைப்படும் எரிப்பொருள்களும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அளிக்க முன்வந்துள்ளது.
மின்பற்றாக்குறை
இன்னும் 20 வருடங்களில் இந்தியாவில் மின்பற்றாக்குறை என் பேச்சுக்கே இடம் இல்லை என்று சொன்னால் மிகையாகாது. இதேபோல் அணு உலை மட்டும் அல்லாமல் சோலார், நிர்மின், காற்று என பல வகையில் மின்சார் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளும் முழுவிச்சில் நடைபெற்று வகுகிறது.