டிக்கெட் புக் செய்ய அனுமதி!! மகிழ்ச்சியில் ஸ்பைஸ்ஜெட்
டெல்லி: நிதி நெருக்கடியில் சிக்கிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த வாரம் சுமார் 1,800 விமானங்களை ரத்து செய்திருந்தது. மேலும் விமான போக்குவரத்து இயக்குநரகம் இந்நிறுவனத்தின் டிக்கெட் புக்கிங்கை தடை செய்திருந்தது குறிப்பிடதக்கது.
இத்தடையை தற்போது நீக்கியுள்ள விமான இயக்குநரகம், தற்போது விமான பயணிகள் இந்நிறுவனத்தில் வரும் மார்ச் 31,2015ஆம் ஆண்டு வரையில் டிக்கெட்டுகளை பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

மேலும் விமான போக்குவரத்து அமைச்சகம், அடுத்த 14 நாட்களில் அனைத்து நிலுவை தொகையும் செலுத்தவும் உத்திரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 2.58 சதவீதம் அதிகரித்து 13.90 ரூபாய்க்கு இந்நிறுவன பங்குகள் விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications