நாக்பூர்: மகாராஷ்டிராவில் புதிதாக இரண்டு துறைமுகங்களை தனியார் நிறுவனங்கள் உருவாக்க உள்ளது என மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
கெங்கன் கடலோர பகுதிகளில் திகி மற்றும் ஜெய்கர் என்ற இரு துறைமுகங்கள் உருவாக உள்ளதாகவும், இவை இரண்டும் அடுத்த 1 வருடகாலத்தில் முழுமையாக செயல்பட துவங்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ரெய்காட் பகுதியில் காரான்ஜா துறைமுகத்தை அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளது மகாராஷ்டிரா அரசு, இத்துறைமுகம் அடுத்த 2 அல்லது 3 வருடங்களில் துவங்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதுமட்டும் அல்லாமல் மும்பை துறைமுகத்தை மேம்படுத்தவும், விரிவாக்கவும் மத்திய அரசு பணியாற்றி வருகிறது எனவும் தேவேந்திரா பட்னாவிஸ் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு புதிய ஜெயில் திட்ட அறிக்கையில் படி நிதிமன்றம் இருக்கும் அனைத்து இடங்களிலும் சிறை வாளாகத்தை கட்டி வருகிறது என தெரிவித்தார்.