மும்பை: கடந்த வாரம் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், இண்டர்நெட் பயன்படுத்தி ஸ்கைப், வைபர் போன்ற மென்பொருள்களின் செய்யும் அழைப்புகளுக்கான் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தது. மேலும் இந்நிறுவனம் அறிவித்தால், பிற நிறுவனங்களும் அதேபோன்ற நடவடிக்கையை பின்தொடரும் என பீதியில் மக்கள் இருந்தனர்.
கட்டண உயர்வு ரத்து
ஆனால் திங்கட்கிழமை காலையில் இந்நிறுவனம் தான் அறிவித்த கட்டண உயர்வு அறிவிப்பை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. இனி வழக்கம்போல் இலவசமாக ஸ்கைப், வைபர் போன்ற செயலிகளை பயன்படுத்து சாதாரண கட்டணத்தில் பேசலாம்.
விதிமுறைகள் முரன்பாடு
மேலும் இந்த கட்டண உயர்வு திட்டம் network neutrality விதிகளுக்கு முரன்பாடாக உள்ளதை ஏர்டெல் நிறுவனம் உணர்த்து இக்கட்டண உயர்வை ரத்து செய்துள்ளது.
முதலீடும்... போட்டியும்...
அதுமட்டும் அல்லாமல் ஏர்டெல் நிறுவனம் அதிவேக தொலைதொடர்பு சேவையில் அதிகளவில முதலீடு செய்துள்ளது, இக்கட்டண உயர்வால் பிற நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிய (ஏர்டெல்) வாடிக்கையாளர்களை கவர முடியும் என்பதை கணக்கிட்டு ஏர்டெல் இந்நிறுவனம் இம்முயற்சியை கைவிட்டுள்ளது.
வருமானம் சரிவு..
கடந்த வாரம் அனைத்து தொலைதொடர்பு கூட்டமைப்பு, மத்திய தொலைதொடப்பு அமைச்சகத்திடம், "ஸ்கைப், வைபர் போன்ற செயலிகளின் மூலம் நிறுவனங்களின் வாய்ஸ் கால் வருமானம் அதிகளவில் குறைந்து வருகிறது." என புகார் தெரிவித்தானர். இதனை களைய விரைவில் செயல்திட்டங்களை தீட்டுவதாக அமைச்சகம் பதில் தெரிவித்துள்ளது.