மும்பை: 2015ஆம் ஆண்டின் முதல் நாள் வர்த்தகத்திலேயே ரூபாய் மதிப்பு சுமார் 21 பைசா சரிந்தது. இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.24 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் அதிகளவில் டாலர் வாங்கியது இச்சரிவிற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இது நேற்றைய வர்த்தக முடிவைான 63.03 விடவும் 21 பைசா குறைவாகும்.
இதுக்குறித்து டீலர்கள் கூறுகையில் இறக்குமதியாளர்களின் அதிகப்படியான டாலர் தேவையாலும், உள்ளநாட்டின் நிலைவும் குறைவான வர்த்தகத்தாலும் ரூபாய் மதிப்பு சரிந்தது என தெரிவிக்கின்றனர்.
மேலும் மும்பை பங்கு சந்தை இன்று வர்த்தக துவக்கத்தில் 70 புள்ளிகள் சரிவுடன் துவங்கி, தற்போது 40 புள்ளிகள் சரிவுடன் 27,458.75 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல் நிஃப்டியிலும், 12.05 புள்ளிகள் சரிந்து 8,270.65 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.