டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் துவக்கி வைத்த ஜன தண் யோஜனா திட்டத்தின் மூலம் இந்தியாவில் 10 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட்டுள்ளது. இது இந்திய வங்கி துறையில் மிகப்பெரிய புரட்சி என பல பத்திரிக்கைகளில் விமர்சனம் செய்து வருகின்றனர்.
98 சதவீதம்
இத்திட்டத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் 98 சதவீத குடும்பங்களுக்கு வங்கிகணக்குள் கிடைக்கபெற்றுள்ளது என மத்திய நிதியமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்துள்ளது.
வைப்பு நிதியின் அளவு
மேலும் கடந்த சில மாதங்களாக இத்திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட வங்கி கணக்குளில் வைப்புகள் அதிகரித்து வருவதாகமவும், அதன் அளவு தற்போது 8,000 கோடியாக உள்ளதாகவும் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் இத்திட்டத்தின் உண்மையான நிலை என்ன??
7.6 கோடி வங்கி கணக்குகள்
இத்திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட 10 கோடி வங்கி கணக்கில், 7.6 கோடி கணக்குகள் அதாவது, 73 சதவீத வங்கிக் கணக்குகளில் ஜிரோ பேலன்ஸ் உள்ளதாக சில வங்கி ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளது.
முக்கிய மாநிலங்கள்
மேலும் இத்திட்டதின் கீழ் அதிகளவிலான வங்கி கணக்குகள் திறந்த பட்டியலில் மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம், ஜம்மு & காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் உள்ளது.