காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் ஞாயிற்றுக்கிழமை 3 நாள் நடக்க இருக்கும் 7வது வைபரன்ட் குஜராத் பிஸ்னஸ் சுமிட் கூட்டம் துவங்கியது. இக்கூட்டத்திக்கு பிரதமரின் அழைப்பை எற்று இந்தியாவின் அனைத்து நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதல் முகேஷ் அம்பானி, குமாரமங்கலம் பிர்லா ஆகிய பல பெரும் புள்ளிகள் அடக்கம்.
இக்கூட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முகேஷ் அம்பானி குஜராத் மாநிலத்தில் அடுத்த 18 மாதங்களுக்குள் 1,00,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார். இதுமட்டும் அல்லாமல் பல தலைவர்கள் அதிர்ச்சி அளிக்கும் முதலீட்ட திட்டங்களை அறிவித்தனர்.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி குஜராத் மாநிலத்தில் அடுத்த 18 மாத காலத்தில் 1,00,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவும், அதில் பெரும் பகுதி குஜராத் பெட்ரோகெமிக்கல் காம்பிளக்ஸில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார்.
குமாரமங்கலம் பிர்லா
முகேஷ் அம்பானியை தொடர்ந்கு அதித்தியா பிர்லா நிறுவனத்தின் தலைவர் குமாரமங்கலம் பிர்லா பேசுகையில், எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு மற்றும் வர்த்தக ஸ்திரதன்மையை மேம்படுத்த 20,000 கோடி முதலீட செய்யவதாக அறிவித்தார்.
அதானி மற்றும் சன் எடிசன்
அதேபோல் இந்தியாவில் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் கடந்த வருடம் நுழைந்த அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி அவர்கள் அமெரிக்காவின் சன்எடிசன் நிறுவனத்துடன் இணைந்து சோலார் பார்க் அமைக்க 25,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தார். அதுமட்டும் அல்லாமல் எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தை போல் எண்ணெய் உற்பத்தியில் இறங்க அதானி குழுமம் அஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது.
பல முதலீடுட்டு திட்டங்கள்
மேலும் 7வது வைபரன்ட் குஜராத் பிஸ்னஸ் சுமிட் கூட்டத்தின் மூலம் குஜராத்தில் 15 இலட்சம் கோடி ரூபாய் (240 பில்லியன் டாலர்) முதலீடு பெற உள்ளது. மேலும் இக்கூட்டத்தின் மூலம் இம்மாநிலத்தில் தொழில் துவங்க 21,000 நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளதாக சில கணிப்புகள் தெரிவித்துள்ளது.
முக்கிய தலைகள்
கலந்து கொண்ட அனைவருமே பெரிய தலைகளாக இருந்தாலும், அரசியல் பெரும் தலைகளாக யுனைடெட் நேஷன்ஸ் பொது செயலாளர் பேன் கி-மூன், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜான் கெரி மற்றும் உலக வங்கி தலைவர் ஜிம் யாங் கிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிற நாட்டு தலைவர்கள்
இக்கூட்டத்தில் இந்திய அமைச்சர்கள் கலந்து கொண்டத்து மட்டும் அல்லாமல் பூட்டான் மற்றும் மாசிடோனியா நாடுகளின் பிரதமர்கள் மற்றும் ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, ஜப்பான், நெதர்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் அமைச்சர்களுடன் 200 நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
கூட்டணி
வைபரன்ட் குஜராத் பிஸ்னஸ் சுமிட், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா, ஹாலந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய எட்டு நாடுகளுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடதக்கது.
பிற மாநிலங்களின் நிலை..
இந்தியாவில் இருக்கும் பெரு நிறுவனங்கள் அனைத்தும் குஜராத் பக்கம் சென்றுவிட்டால் இந்தியாவின் பிற மாநிலங்களின் நிலை என்ன??
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications