மும்பை: ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விமான பயணிகளின் வருகை எண்ணிக்கை குறைந்துக்காணப்படும், இதன் காரணமாக பயணிகளின் வருகையை அதிகரிக்க மத்திய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா 1,557 ரூபாய் என்ற அதிரடியான சலுகை கட்டணத்தை அறிவித்துள்ளது.
ஸ்பிரிங் சேல் 2015 என்ற பெயரில் இக்கட்டண சலுகையை திங்கட்கிழமை ஏர் இந்தியா துவங்கியுள்ளது, மேலும் இச்சலுகை வருகிற ஜனவரி 18ஆம் தேதி வரை நீடிக்கும். இச்சலுகையில் டிக்கெட் புக் செய்யும் பயணிகள் தங்களின் பயணத்தை ஜனவரி 16 முதல் ஏப்ரல் 30 வரையில் மேற்கொள்ளலாம்.

இந்த சலுகை ஏர் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவைக்கு மட்டும் தான் என்று ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் டிராவல் ஏஜென்ட்கள் கூறுகையில் ஏர் இந்தியா சலுகையை அறிவிப்பது மிகவும் அறிதானது எனவே அதை பயனபடுத்தி பயணிகள் அதிகளவிலான பணத்தை சேமிக்க முடியும் என்று தெரிவித்தனர்.

ஏர்இந்தியாவை தொடர்ந்து பிற விமான நிறுவனங்களும் கட்டண சலுகையை அறிவிக்கமா?? என்று கேட்டால் சந்தேகமே. இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து விமான பயணிகள் போக்குவரத்து நிறுவனங்களும் தற்போது நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது இதனால் சலுகை அளிப்பது சந்தேகமே.


Click it and Unblock the Notifications