இந்தியாவின் "சிறந்த பேப்பர் மில்" விருதை தட்டிச்சென்றது டி.என்.பி.எல்

டெல்லி: 2013-2014ஆம் ஆண்டுக்கான சிறந்த பேப்பர் மில் விருதை தமிழ்நாடு நியூஸ்பிரின்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் நிறுவனம் தட்டிச்சென்றுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்தியன் பேப்பர் உற்பத்தியாளர் கூட்டமைப்பான IPMA தெரிவித்துள்ளது.

IPMA அமைப்பின் 15வது ஆண்டு பொதுக்கூட்டம் டெல்லியில் கடந்த வாரம் 9ஆம் தேதி நடந்தது. இந்நிகழ்ச்சியில் 2013-14ஆம் ஆண்டுக்கான சிறந்த பேப்பர் மில் என்ற விருதை தமிழ்நாட்டு நியூஸ்பிரின்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் பெற்றுள்ளது, இதே விருதை 2011-12ஆம் நிதியாண்டிற்காக இந்நிறுவனம் பெற்றிருந்தது.

இந்தியாவின்

இந்த விருதை மத்தி வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின், தொழிற்சாலை கொள்கை மற்றும் மேம்பாட்டு (காகிதம்) பிரிவின் செயலாளர் சைலேந்திர சிங் அளிக்க TNPL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வெள்ளியங்கிரி பெற்றுக்கொண்டார்.

டி.என்.பி.எல் நிறுவனம் ஆண்டுக்கு 4 இலட்ச மில்லியன் டன் காகிதத்தை உற்பத்தி செய்கிறது, இதில் 20 சதவீதத்தை 35 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

சமீபத்தில் இந்நிறுவனம் 1500 கோடி மதிப்பீட்டில் 2 இலட்சம் டன் உற்பத்தியாகும் திறன் கொண்ட மல்டிலேயர் டபுல் கோட்டெட் போர்டு பிளான்ட் அமைக்க திட்டம்திட்டியுள்ளது, இதற்காக ஒப்புதலும் நிர்வாகம் பெற்றது குறிப்பிடதக்கது. இப்புதிய இயந்திரம் அமைக்கும் பணி 2015 டிசம்பர் மாதம் முடிவடையும் என தெரிகிறது.

எனவே 2016-17ஆம் நிதியாண்டில் இந்நிறவனத்தின் உற்பத்தி திறன் 6 இலட்சம் மில்லியன் டன்களாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+