டெல்லி: 2012ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் ஊதிய உயர்வு பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசை எதிர்த்து பொதுத்துறை வங்கி அதிகாரிகள் இந்தியா முழுவதும் ஜனவரி 21ஆம் தேதி முதல் 4 நாள் போராட்டம் நடத்த உள்ளதாக வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் உயர் அதிகாரி அறிவித்துள்ளனர். 6 நாள் கணக்கு எப்படி?
இப்போராட்டம் ஜனவரி 21 (புதன்கிழமை) தொடர்ந்து ஜனவரி 24ஆம் (சனிக்கிழமை) தேதி வரை நடக்கிறது. ஆனால் 25 ஞாயிற்றுக்கிழமை, 26 ஆம்தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை. அதனால் 6 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.
ஜனவரி 7
வங்கித்துறை அதிகாரிதகள் ஊதிய உயர்வு கோரி கடந்த ஜனவரி 7ஆம் தேதியன்று போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனார், ஆனால் பின்பு இப்பிரச்சனைக்கு துரித முடிவுகளை எடுக்க IBA அமைப்பு இப்போராட்ட முடிவில் இருந்து பின்வாங்கியது.
இப்போ போராட்டம் உறுதி..
இம்முறை போராட்ட அறிவிப்பை யுனைடெட் போரம் ஆஃப் பாங்க் யூனியன்ஸ் UFBU அறிவித்துள்ளது. இக்கூட்டமைப்பில் 10 இலட்சத்திற்கு அதிகமான பணியாளர்கள் உள்ளனர்.
6 நாள் விடுமுறை
இப்போராட்டத்தை குறித்து சர்மா அவர்கள் கூறுகையில் "ஊதிய உயர்வு குறித்து எவ்வதிமான பரிந்துரையும் IBA இக்காலகட்டத்தில் செய்யவில்லை, அதனால் UFBU அமைப்பு 4 நாள் போராட்டத்தை அறிவித்துள்ளது, இதன் மூலம் நாட்டில் வங்கிச் சேவை 6 நாட்கள் பாதிக்கும் " என தெரிவித்தார்.
நிலுவை...
வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை 2012ஆம் ஆண்டு ஜனவரி 2012ஆம் ஆண்டு முதல் நிலவி வருகிறது. இதற்காக UFBU பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த வகையிலும் முன்னேற்றம் இல்லை என சர்மா அவர்கள் தெரிவித்தார்.
மார்ச்சில் ஒரு குண்டு
இந்த போராட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தால் மார்ச் 16ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சர்மா தெரிவித்தாக். இதற்காக அறிவிப்பை UFBU அமைப்பு IBA கூட்டமைப்பிற்கு அளித்துள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications