சென்னை: மத்திய அரசு அளிக்கும் மானியங்கள் அனைத்தும் சரியான முறையில் கொண்டு சேர்க்கும் திட்டங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி மேம்படுத்த அதிகப்படியான முதலீட்டை கவர வடிவமைக்கப்பட்டிருக்கும் திட்டங்களை அனைத்து படிப்படியாக சீர்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை சென்னையில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) ஏற்பாடு செய்த கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும் அவர், ஜனவரி 1 முதல் இந்தியாவில் பல பகுதிகளில் சிலிண்டருக்கான மானியங்களை வங்கி கணக்கு மூலம் அளிக்கப்பட்டு வருகிறது எனவும், பிற மானியங்களும் இத்திட்டத்தின் வழியில் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட்
2015-16ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பிமல் ஜலன் தலைமை வகிக்கும் செலவீன நிதிக் ஆணையம் அளித்த பரிந்துரைகளை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மானியம்
பிமல் ஜலன் அளித்த பரிந்துரைகளில் மத்திய அரசு எண்ணெய், விவசாய உரங்களுக்கும் அளிக்கும் மானியத்தின் அளவுகள் இலட்சம் கோடி அளவில் உள்ளது, இதை முறைப்படுத்த சில திட்டங்களை அளித்துள்ளார். இதேபோல் மானியங்கள் மட்டும் அல்லாமல் பொது செலவீனங்களையும் முறைப்படுத்த திட்ட பரிந்துரைகளை மத்திய அரசிற்கு அளித்துள்ளார் ஜலன்.
சரக்கு மற்றும் சேவை வரி
அதுமட்டும் அல்லாமல் அருண் ஜேட்லி அவர்கள் வரி மற்றும் பிற துறை திட்ட வடிவங்களில் உறுதியான நிலையை உருவாக்க வேண்டும், இதன் மூலம் இந்தியா வர்த்தகத்திற்கும், முதலீட்டிற்கும் சிறந்த இடமாக உருவாகும் என தெரிவித்தார். மேலும் அவர் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அமல்படுத்தவதன் மூலம் நாட்டின் வர்த்தக நிலைய உருமாறும். தெரிவித்தார்.
யாருக்கும் நஷ்டம் இல்லை..
சரக்கு மற்றும் சேவை வரியை இந்தியாவின் பல மாநிலங்கள் வரவேற்றுள்ளது, இதன் மூலம் எந்த ஒரு மாநிலத்திற்கும் வரி வசூலில் தொய்வு இருக்காது எனவும் தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட்
மேலும் நில கையகப்படுத்தும் சட்டங்களில் செய்யப்படும் மாற்றங்கள் விசயாயிகளுக்கு சாதகமாக அமையும் என தெரிவித்தார். இதன் மூலம் தங்களது நிலத்திற்கு அதிகப்படியான விலை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications