டெல்லி: வளர்ந்து வரும் நாடுகளில் விமான போக்குவரத்து சேவை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் பயணிகள் விமான போக்குவரத்து சேவையில் மந்த நிலையே நிலவுகிறது. பயணிகள் விமான போக்குவரத்து சேவையில் இந்திய சந்தையில் இருக்கும் வாய்ப்புகளை கைபற்ற இந்நியாவில் பல பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்துள்ளது.
2014ஆம் ஆண்டில் விமான போக்குவரத்து நிறுவனங்கள் அளித்த அதிராடியான சலுகை மற்றும் தள்ளுபடியில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் உயர்ந்துள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மேலும் குறைவான காலகட்டத்தில் இத்துறை சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
10 சதவீதம் உயர்வு
இந்த வருடம் விமான நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அளித்த சலுகை விலையில் 673.83 இலட்சம் பயணிகள் விமானத்தில் பறந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை கடந்த வருடத்தை ஒப்பிடும்போது 10 சதவீதம் அதிகமாகும்.
614.26 இலட்சம் பயணிகள்
விமான போக்குவரத்து இயக்குநரகம் அளித்த தகவலின் படி 2013ஆம் ஆண்டில் 614.26 இலட்சம் மக்கள் மட்டுமே விமான சேவையை பயன்படுத்தியுள்ளனர்.
தனியார் நிறுவனங்கள்
கடந்த ஒரு வருடத்தில் 673.83 இலட்சம் பயணிகளில் 18.4 சதவீதம் மக்கள், அரசு போக்குவரத்து விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் சேவையை பயன்படுத்தியுள்ளனர். 81.6 சதவீத மக்கள் (549.58 இலட்சம் பயணிகள்) தனியார் நிறுவனங்களின் சேவையை நாடி சென்றுள்ளனர்.
இண்டிகோ
தனியார் நிறுவனங்களில், இண்டிகோ நிறுவனம் 31.8 சதவீத சந்தையை கைபற்றி, 214.25 இலட்சம் பயணிகளுக்கு இந்நிறுவனம் தனது விமான சேவையை அளித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்
இண்டிகோ நிறுவனத்திற்கு அடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 21.37 சதவீத சந்தையை கைபற்றியுள்ளது. மேலும் இவ்வாண்டில் இந்நிறுவனம் 146.65 இலட்ச உள்நாட்டு விமான பயணிகளை கவர்ந்துள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications