டெல்லி: ஐரோப்பிய சந்தையில் இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்குவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. மேலும் அதுக்குறித்த அறிவிப்புகள் மற்றும் தடை நீக்கத்தற்கான ஆணை அனைத்தும் ஐரோப்பிய கமிஷன் வெளியிடும் புதிய சட்ட அறிக்கைக்குப்பின் ஒரு மாதகாலத்தில் அமலுக்கு வரும் எனவும் தெவித்துள்ளது.
மாம்பழங்களுக்கு தடை
2014ஆம் ஆண்டின் மே மாதம், இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மாம்பழங்களில் பூச்சிகள் இருந்ததால் இந்திய மாம்பழங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
தடை நீக்கம்..
இதன் பின் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பிற பொருள்களின் பேக்கேஜிங் மற்றும் ஆய்வு செயல்முறை மேம்பட்டுள்ளதாக ஐரோப்பிய கமிஷன் கண்டறிந்துள்ளது. இதன் மூலம் தடையை விரைவில் நீக்கவும் உள்ளதாக அறிவித்துள்ளது.
வாக்கெடுப்பு
மேலும் இந்த தடை நீக்கம் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி செயல்முறை மேம்பட்டுள்ளதாக ஐரோப்பிய சந்தையில் இந்திய மாம்பழ இறக்குமதிக்கு ஒப்புதல் அளிக்க அதிகளவிலான வாக்குகள் விழுந்தது.
பிற உணவு பொருட்கள்
ஐரோப்பிய கமிஷன் மாம்பழங்கள் மீதான தடையை நீக்கினாலும், பாகற்காய், கத்திரிக்காய் மற்றும் புடலை காய்கள் மீதான இறக்குமதி தடை இன்னும் நீடிக்கிறது.
20 மாதங்கள்
மேலும் பிற காய்கறி மீதான தடை ஐரோப்பிய கமிஷன் 20 மாதஙகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வகை இத்தடை நீடிக்கும்.
பேக்கேஜிங்
மேலும் இந்தியா தற்போது ஐரோப்பா மட்டும் அல்லாமல் அமெரிக்கா போன்ற பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து உணவு பொருட்களிலும், மாசு மற்றும் கலப்படங்களை கண்டறிய புதிய திட்ட வடிவங்களை அமைத்துள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.