மும்பை: பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை மத்திய பட்ஜெட் அறிக்கையை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது. இந்நாளில் இந்திய பங்கு சந்தைகள் செயல்பட ஆர்வம் காட்டியுள்ளது.
2014ஆம் நிதியாண்டின் பட்ஜெட் அறிவிப்பு நாளின் போது, மும்பை பங்கு சந்தை மற்றும் நிப்ஃடி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இதனை கருத்தில் கொண்டு பங்கு சந்தை நிறுவனங்கள் பட்ஜெட் அறிவிப்பு நாளில் முழு வீச்சில் செயல்பட ஆர்வமாக உள்ளது.
அதுக்குறித்து தேசிய பங்குச்சந்தையின் செய்திதொடர்பாளர் கூறுகையில், "பட்ஜெட் வெளியிட்டு நாள் அன்று சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி சந்தை செயல்பட அனுமதி அளித்தால் நாங்கள் செயல்பட தயாராக உள்ளோம், மேலும் செபி பதில்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்." என தெரிவித்தார்.
மும்பை பங்கு சந்தையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் BSE நிறுவனம் பிப்ரவரி 28ஆம் தேதி செயல்பட தேசிய பங்கு சந்தை நிறுவனம் (NSE) மற்றும் செபியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாக கூறினார்.