இந்திய சந்தையில் ஒரே மாதத்தில் ரூ.21,000 கோடி முதலீடு!! அன்னிய முதலீட்டாளர்கள் அதிரடி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் நிலவும் பணவீக்க அளவை குறைக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பல நடவடிகைகள் எடுத்துள்ளது இதன் காரணமாகவும் மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பின் காரணமாக இந்திய சந்தையில் ஜனவரி மாத்தில் மட்டும் சுமார் 21,000 கோடி ரூபாய் பணத்தை அன்னிய முதலீட்டாளரகள் முதலீடு செய்துள்ளனர்.

 

ஜனவரி 23ஆம் தேதி வரையில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் 5,992 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளில் முதலீடு செய்யுள்ளனர். அதேபோல் கடன் சந்தையில் 15,336 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். மொத்தம் 21,328 கோடி ரூபாயாகும்.

 
இந்திய சந்தையில் ஒரே மாதத்தில் ரூ.21,000 கோடி முதலீடு!! அன்னிய முதலீட்டாளர்கள் அதிரடி..

நாட்டின் குறைவான பணவீக்கத்தை எதிர்நோக்கி அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீட்டை இந்தியா சந்தையில் செய்து வருகின்றனர். இதேபோல் ரிசர்வ் வங்கியின் 0.25 சதவீத வட்டிக்குறைப்பு சந்தையின் முதலீட்டு அளவை புதிய உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது.

மேலும் ஐரோப்பிய சென்டர்ல் வங்கியின் 100 பில்லியன் யூரோ முதலீட்டு திட்டம் இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளை புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

2014ஆம் நிதியாண்டில் இந்தியாவின் கடன் சந்தையில் மொத்தம் 1.16 இலட்சம் கோடி ரூபாயும், பங்குச் சந்தையில் 98,150 கோடி ரூபாயும் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

FIIs inflow reaches Rs 21,000 crore so far in Jan

Overseas investors have pumped in a staggering over Rs 21,000 crore in Indian capital markets since the beginning of the month owing to easing inflation and rate cut by Reserve Bank of India (RBI).
Story first published: Monday, January 26, 2015, 11:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X