மும்பை: ரிசர்வ் வங்கி செவ்வாய்க் கிழமை 2014-15ஆம் நிதியாண்டின் 6வது இருமாத மறுஆய்வு கொள்கையை அறிவித்துள்ளது. அனைவரும் எதிர்பார்க்கும் படி ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கவில்லை. எனவே ரெப்போ வட்டி விகிதத்தை 7.75 சதவீதமாக நிலை நிறுத்தியுள்ளது ரிசர்வ் வங்கி.
ரெப்போ விகிதத்தை போலவே சி.ஆர்.ஆர் விகிதத்தையும் மாற்றவில்லை, எஸ்.எல்.ஆர் விகிதத்தில் மட்டும் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது.
நாட்டின் வளர்ச்சி
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி வட்டி வகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் நாட்டின் வளர்ச்சி 2016ஆம் நிதியாண்டில் 6.5 சதவீத அளவை எட்டும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
வட்டி குறைப்பு
கடந்த ஜனவரி 15ஆம் ரிசர்வ் வங்கி அறிவித்த 0.25% வட்டி குறைப்பின் மூலம் நாட்டின் நிலவும் பணசுருக்க நிலை மேம்பட்டுள்ளதாக தெரியவில்லை என பல பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாத முடிவில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 0.1 சதவீதமாக இருந்தது.
20 மாதங்கள்
மேலும் இந்த வட்டி குறைப்பு 20 மாதங்களுக்கு பிறகு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது. ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் நியமனத்திற்கு பிறகு செய்ய முதல் வட்டி குறைப்பு இதுவே.
கட்டுமானத்துறை
நாட்டின் கட்டுமான வளர்ச்சி விகிதம் டிசம்பர் மாதம் 6.7 சதவீதத்தில் இருந்து 2.4 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது.
குறைவான வளர்ச்சி
அதுமட்டும் அல்லாமல் வட்டி குறைப்பின் மூலம் நாட்டின் முக்கிய துறையாக கருதப்படும் கோல், கச்சா எண்ணெய், எரிவாயு, பெட்ரோல் சுத்திகரிப்பு, ஸ்டீல், சிமெண்ட், உரங்கள் மற்றும் மின்சார துறையில் மிகவும் குறைவான வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது குறிப்பிடதக்கது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக் மூலம் இணைந்திடுங்கள். இணைந்திட இதை கிளிக் செய்திடவும்.