மும்பை: ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட 6வது நாணய மறுஆய்வு கொள்கையின் மூலம் மும்பை பங்குச்சந்தை 150 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது. இதில் வங்கித்துறை பங்குகள் அதிகம் பாதிக்கப்பட்டது.
வங்கித்துறை பாதிப்பிற்கு முக்கிய காரணமாக பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் வராக் கடன் அளவின் அதிகரிப்பிற்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் அன்னிய முதலீட்டாளர்கள் இம்மாத இறுதியில் வெளிவரும் மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி முதலீட்டை அளவை அதிகளவில் குறைத்துள்ளனர்.
மும்பை பங்குச் சந்தை
இன்று காலை வர்த்தக துவக்கத்தில், மும்பை பங்குச் சந்தையில் நேற்று ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு உயர்வை கண்டு வரும் வேலையில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியானது. வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாத காரணத்தால் வங்கி துறை பங்குகள் மிகவும் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டது. இதனால் வங்கித்துறை பங்குகள் 387 புள்ளிகள் சரிவை கண்டது.
வங்கித்துறை பங்குகள்
இந்நிலையில் ஆக்சிஸ் வங்கி 3.89%, ஹெச்டிஎஃப்சி 2.18, ஸ்பிஐ வங்கி 2%, ஹெச்டிஎஃப்சி வங்கி 1.28%, ஐசிஐசிஐ வங்கி 1.27%, பஞ்சாம் நேஷ்னல் வங்கி 7.06% அளவில் சரிவை தழுவியது.
நிஃப்டி
மும்பை பங்குச்சந்தையே போலவே நிஃப்டியும் வர்த்தக துவக்கத்தில் உயர்வை சந்தித்து 50 புள்ளிகள் வரை சரிந்தது.
லாபம் அடைந்த நிறுவனங்கள்
மும்பை பங்குச்சந்தை தற்போது உள்ள நிலையில் பார்தி ஏர்டெல், ஒன்என்ஜிசி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், டிசிஎஸ், ஐடிசி, கோல் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.