டெல்லி: மாநிலப் பிரிப்பால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி தத்தளித்து வந்த ஆந்திராவிற்கு மத்திய அரசு ஆறுதலான செய்தியை வைத்துள்ளது.
ஆந்திர மாநில வளர்ச்சிப் பணிகளுக்காக மத்தியஅரசு சுமார் 850 கோடி ரூபாய் ஒதுக்கியதுடன் அந்த மாநிலத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வரிக் விலக்கு கொள்கைகளையும் அறிவித்துள்ளது.
வளர்ச்சி திட்டங்கள்
ஆந்திர மாநில மறுகட்டமைப்புச் சட்டம் 2014 என்ற புதிய சட்டத்தின் கீழ், மத்திய அரசு அந்த மாநிலத்திற்கு தேவையான உதவிகளை சிறப்பு வளர்ச்சித் திட்டங்களின் மூலம் அங்குள்ள பின்தங்கிய பகுதிகள், ராயலசீமா மற்றும் வட கடலோர மாவாட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகை செய்துள்ளது.
50 கோடி ரூபாய்
"2014-15 ஆம் ஆண்டில், மாவட்டத்திற்கு 50 கோடி ரூபாய் என்ற விகிதத்தில் ஆந்திராவின் ஏழு பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ச்சிப்பணிகளுக்காக அம் மாநில அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என மத்திய நிதி அமைச்சகம் தன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குழு
மேலும், அமைச்சரவைகளுக்கு இடையிலான ஒரு ஒருங்கிணைந்த குழு ஒன்று உள்துறை அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்டு அதன் மூலம் மாநிலத்தில் நிலவி வரும் சூழ்நிலைகளை ஆராய்ந்து வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவையான நிதியில் அம்மாநில அரசுக்கு ஏற்படும் செலவின பற்றாக்குறையை 2014-15 ஆம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் சரிகட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா
"எனினும், இந்த குழு சிபாரிசுகளைத் தரும் வரை தற்காலிகமாக ரூபாய் 500 கோடி நடப்பு நிதியாண்டில் அம்மாநிலத்திற்கு வழங்கப்படும்" எனவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டு
மேலும் இந்த இரு மாநிலங்களுக்கு வரிச்சலுகைகள் மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான வழிவகைகளையும் செய்யும்.
உற்பத்தித் தொழிற்சாலை
இம்மாநிலத்தின் பின் தங்கிய பகுதிகளில் உற்பத்தித் தொழிலை துவங்கும் நிறுவனங்களுக்கு முதல் வருடத்தில் நிறுவப்படும் இயந்திரங்களுக்கு 15 சதவிகிதம் கூடுதல் வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications