டெல்லி: உலக நாடுகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முதன்மையானவை. மேலும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக விளங்கும் சீனாவிற்கு ஒத்து உள்ளதாகவும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இந்திய அரசு தனது 2014ஆம் ஆண்டுக்கான ஜிடிபி அளவை 7.4 சதவீதமாக உயர்த்தினால் கண்டிப்பாக எட்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 2014ஆம் நிதியாண்டில் சீன பொருளாதாரம் 7.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
இந்தியா - சீனா
இந்தியா மற்றும் சீனா பொருளாதாரத்தை ஒருபோது ஒப்பிட முடியாது என்றாலும், வளர்ச்சி விகிதத்தை எளிதாக ஒப்பிடலாம். மேலும் இந்தியா தற்போது சீனாவின் உற்பத்தி அதிகாரிப்பு மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு பார்மூலாவை பயன்படுத்தி வருகிறது. இதன் இலக்கை எளிதாக எட்டிவிடலாம் எனவும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
3வது காலாண்டு வளர்ச்சி
மத்திய அரசு திங்கட்கிழமை GVA முறையில் ஜிடிபி அளவை கணக்கிட்டு 2014ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் கிடைத்தை அதிகப்படியான அன்னிய முதலீட்டு காரணமாக இக்காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அளவு 7.5 சதவீதமாக உள்ளது என அறிவித்துள்ளது. 2வது காலாண்டில் 8.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
ஜிடிபி
மேலும் 2014ஆம் ஆண்டின் வளர்ச்சியை அளவை 6.9 சதவீதமாக அறிவித்ததுள்ளது குறிப்பிடதக்கது. பழைய முறையில் கணக்கிட்டால் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 4.7 சதவீதம் மட்டுமே.
ஜிடிபி கணிப்பில் குழப்பம்
ஜிடிபி அளவு குறித்து கிரிசில் நிறுவனத்தின் தலைமை பொருளாதாக அதிகாரி கூறுகையில் ஜிடிபி அளவு அதிகமாக இருக்கும் இவ்வேலையில் வங்கிகளின் இருப்பு அளவு குறைவாக உள்ளது. இது முற்றிலும் முறன்பாடாக உள்ளது.
ரகுராம் ராஜன்
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில் ஜிடிபி கணக்கிட்ட GVA முறையை முழுமையாக ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்தார். மேலும்
தலைமை பொருளாதாக ஆலோசகர்
மேலும் மத்திய அரசின் தலைமை பொருளாதாக ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் கூறுகையில் ஜிடிபி கணக்கிட்ட முறையில் குழப்பம் நிலவுவதாகவும், அதனை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.