மும்பை: இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் இண்டர்நெட் சேவை கிடைக்க வழிவகை செய்யும் இண்டர்நெட்.ஆர்க் திட்டத்தில் பேஸ்புக் நிறுவனத்துடன் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.
இண்டர்நெட்.ஆர்க் என்ற திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் துவங்கியது. இத்திட்டம் இந்தியா மட்டும் அல்லாமல் ஆப்பிரிக்கா உள்ளிட்ட இண்டர்நெட் சேவை இல்லாத நாடுகளுக்கு இலவச இண்டர்நெட் அல்லது குறைவான விலையில் இண்டர்நெட் சேவை அளிக்க உள்ளது.
இண்டர்நெட்.ஆர்க்
இத்திட்டத்தின் மூலம் இண்டர்நெட் சேவை கிடைக்கப் பெறாத மக்களுக்கு பேஸ்புக் பயன்பாடு, இண்டர்நெட் சேவை கொண்டு சேர்க்க மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும். அதேபோல் மக்களுக்கு சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற முக்கிய பிரிவு இணையதளங்களை இலவசமாக பயன்படுத்த முடியும்.
பிற நிறுவனங்கள்
இத்திட்டத்தில் பேஸ்புக் நிறுவனம் மட்டுமல்லாமல் பல தொலைதொடர்பு நிறுவனங்கள், மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், வன்பொருள் நிறுவனங்கள் மற்றும் சிப் தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்துள்ளது.
ஆப்பிரிக்கா
மேலும் பேஸ்புக் நிறுவனம் இத்திட்டத்தை இந்தியாவிற்கு முன் அப்பிரிக்காவில் ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தின் (ஏர்டெல்) உதவிடன் செயல்படுத்தியது.
ஆப்பிரிக்கா
மேலும் பேஸ்புக் நிறுவனம் இத்திட்டத்தை இந்தியாவிற்கு முன் அப்பிரிக்காவில் ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தின் (ஏர்டெல்) உதவிடன் செயல்படுத்தியது.
இலவச இண்டர்நெட்
இந்தியாவில் இண்டர்நெட்.ஆர்க் திட்டத்தில் இணைய தொலைதொடர்பு நிறுவனங்கள் இலவச இண்டர்நெட் அல்லாது மிகக் குறைவான விலையில் இண்டர்நெட் சேவை அளிக்க வேண்டிய நிலை உருவாகும். இதனால் இந்தியாவில் எந்த நிறுவனமும் இத்திடத்தில் இணைய ஆர்வம் காட்டவில்லை.
அதிக வாடிக்கையாளர்
அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக பேஸ்புக் நிறுவனத்திற்கு அதிகப்படியான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நாடு இந்தியா. மேலும் அடுத்த 5 வருடத்தில் இந்தியா முதல் இடத்தில் வரும் எனவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.


Click it and Unblock the Notifications