சென்னை: நாட்டில் வாகன உற்பத்தியில் பல நிறுவனங்கள் உள்ள நிலையில் இருசக்கர வாகனம் முதல் ராணுவ வாகனங்கள் உற்பத்தி செய்யும் ஒரே நிறுவனமான மஹிந்திரா நிறுவனம் தமிழ்நாட்டில் வாகனத் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்புக்காக சுமார் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
இப்புதிய தொழிற்சாலையை அமைக்க காஞ்சிபுரத்திற்கு அருகில் செய்யாறு பகுதியில் தமிழக அரசு 225 ஏக்கர் நிலம் அளிப்பதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
255 ஏக்கர் நிலம்
இதுக்குறித்து இந்நிறுவனத்தின் வாகனப் பிரிவு செயல் இயக்குநர் பவன் கோயங்கா கூறுகையில், செய்யாறில் 255 ஏக்கர் நிலத்தை ஒதுக்க தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகள் விரைவாக எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஒப்பந்தம்
இத்திட்ட தொடர்பான ஒப்பந்தம், வரும் மே மாதம் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்திடப்படும் எனவும் தெரிவித்தார்.
முதலீடு
மேலும் இந்த முதலீடு இரண்டு கட்டமாக தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்படும் என மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் மிகப் பெரிய உற்பத்தி ஆலையாக இது இருக்கும் என நம்பப்படுகிறது.
மஹிந்திரா & மஹிந்திரா
முதல் கட்டமாக வாகனங்களுக்கான பரிசோதனை மையம் அமைக்கப்படும். அடுத்த கட்டமாக, வாகன உற்பத்தி ஆலை அமைக்கப்படும். மஹிந்திராவின் புதிய மாடல்கள் யாவும் செய்யாறு ஆலையில் தயாரிக்கப்படும் என இந்நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
சரக்கு மற்றும் சேவை வரி
மத்திய அரசு பிப்.27 ஆம் தேதி வெளியிட உள்ள பட்ஜெட்டில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்படுமா என்ற கேள்விக்கு கோயங்கா, "மத்திய அரசு நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் செய்வதற்கு மிகவும் ஆர்வுடன் உள்ளது இதற்கான அனைத்து விதமான பணிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது" என தெரிவித்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications