பட்ஜெட்டை எதிர்நோக்கி பங்குச்சந்தையில் அதிக முதலீடு!! 170 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை மும்பை பங்குச்சந்தையில் 170 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. பிப்.28ஆம் தேதி மத்திய அரசு வெளியிட உள்ள பட்ஜெட் எதிரொலியாக சந்தையின் போக்கு சிறப்பாக உள்ளதால், சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

மேலும் உலக சந்தைகள், அதிலும் ஆசிய சந்தைகளில் வலிமையான நிலை இந்திய சந்தைக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக உள்ளது.

பட்ஜெட்டை எதிர்நோக்கி பங்குச்சந்தையில் அதிக முதலீடு!! 170 புள்ளிகள் உயர்வுடன் சென்செக்ஸ்..

இந்நிலையில் மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 10.17 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 211.82 புள்ளிகள் உயர்ந்து 29,304.55 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டியில் 56.20 புள்ளிகள் உயர்ந்து 8,861.70 புள்ளிகளை எட்டியுள்ளது.

மேலும் திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான் சந்தை 8 வருட உயர்வை எட்டியுள்ளது. ஐரோப்பிய சந்தையில் நிலவும் நிலையற்ற பொருளாதார தன்மையின் காரணமாக முதலீட்டாளர் ஆசிய சந்தையிலும், பிற நாடுகளிலும் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

ஆஸ்திரேலியா நாணய மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று இதன் வர்த்தகம் நிலையாக உள்ளது. ஷாங்காய் சந்தை 0.1 உயர்வை பதிவு செய்துள்ளது.

சந்தையின் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் 40.95 புள்ளிகள் உயர்ந்து 29,135.88 புள்ளிகளை அடைந்தது. இதேபோல நிஃப்டியில் 3.85 புள்ளிகள் உயர்ந்து 8,809.35 புள்ளிகளை அடைந்தது.

குட்ரிட்டன்ஸ்

இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex up 170 points in early trade

Indian shares rose nearly 0.62 per cent on Monday on fresh buying by funds and retail investors amid firm global cues.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X