மும்பை: 20 வருடத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கி, மீண்டும் ஒரு ரூபாய் தாள்களை புழக்கத்திற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 1.ரூ, 2.ரூ தாள்களை அச்சடிப்பது 1994, 1995 தத்தம் வருடத்திலேயே நிறுத்தப்பட்டாலும், நாணய சட்டம் 2011இன் படி இன்னமும் இந்த ரூபாய் நோட்டுகள் நாட்டில் செல்லதக்கதாக உள்ளது.
புதிதாக அச்சிடப்படும் ஒரு ரூபாய் தாள்களை மத்திய அரசு அச்சிட உள்ளது, பொதுவாக அனைத்து ரூபாய் நோட்டுகளும் ரிசர்வ் வங்கியால் அச்சிடப்படும். ஆனால் ஒரு ரூபாய் தாள்கள் மட்டுமே மத்திய அரசால் அச்சிடப்பட்டு நிதியமைச்சக செயலாளர் கையெழுத்துடன் புழக்கத்திற்கு வருகிறது.
புதிய ஒரு ரூபாய் தாள்கள்
மேலும் புதிய ஒரு ரூபாய் தாள்கள் பச்சை நிறத்தில் அல்லாமல் பிங்க் கிரீன் நிறத்தில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் புதிய டிசைன் வடிவமைப்புடன் வெளிவரும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிதாக மத்திய அரசு வெளியிடும் ஒரு ரூபாய் நோட்டில் 9.7 செ.மீ, 6.3 செ.மீ நீள அகலம் கொண்டிருக்கும்.
சில்லறை தட்டுப்பாடு
நாட்டின் ஒரு ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு உள்ளதால், சில்லறை தட்டுப்பாட்டை போக்க ஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் அச்சிடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் தகவல் வெளியானது.
வாழ்நாள்
நாணயங்களோடு ஒப்பிடுகையில் ரூபாய் தாள்கள் குறிப்பாக 1.ரூ மற்றும் 2.ரூ தாள்களின் வாழ்நாள் மிகவும் குறைவு. அதாவது இவற்றின் சராசரி வாழ்நாள் ஓராண்டுக்கு மிகுவதில்லை. இதை கருத்தில் கொண்டே மத்திய அரசு ரூபாய் தாள்களை அச்சடிப்பதை நிறுத்தியது.
பிற நோட்டுகள்
ஒரு ரூபாய் தாள்களின் வாழ்நாளையும், அச்சிடும் செலவையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு 1995ம் ஆண்டு ரூ.2 தாள்கள், 1995 ரூ.5 தாள்களை அச்சிடுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் இவை இன்றும் புழக்கத்திலும் செல்லதக்கதாகவும் உள்ளது.
ஒரு ரூபாய் தாள்
தற்போது ரிசர்வ் வங்கியின் தகவல் படி இந்தியாவில் சுமார் 3,076 கோடி ரூபாய் அளவு ஒரு ரூபாய் தாள்கள் புழக்கத்தில் உள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications