டெல்லி: மத்திய ரயில்வே பட்ஜெட்டை வெளியிட ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், 2015ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வே கட்டணங்கள் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என மத்திய ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு இத்துறைக்கு அளித்து வரும் மானியங்களை குறைத்துள்ள நிலையில் கட்டண குறைப்பை கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது என மாநில ரயில்வே துறை அமைச்சரான மனோஜ் சிங்ஹா தெரிவித்துள்ளார்.
மனோஜ் சிங்ஹா
ரயில்வே கட்டணங்கள் ஏற்கனவே குறைவாக இருக்கும் நிலையில் கட்டண குறைப்புகளை அளிக்க முடியாது என இத்துறை மாநில அமைச்சர் மனோஜ் சிங்ஹா தெரிவித்துள்ளார். அதுமட்டும் அல்லாமல் டீசல் விலை குறைந்தாலும் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பிப். 26 ரயில்வே பட்ஜெட்
2015ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்.28ஆம் தேதி வெளிவரும் நிலையில், மத்திய பட்ஜெட் பிப்.26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சரக்கு போக்குவரத்து
இந்திய ரயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் 2014ஆம் நிதியாண்டில் வருவாய் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜனவரி காலகட்ட வரையில் 87000 கோடி ரூபாய் வருவாயாக பெற்றுள்ளது.
நிதி தேவை
இத்துறைக்கு செயல்பாட்டில் இருக்கும் திட்டத்திற்கு முழுமைபெற அதிகப்பிடான நிதி தேவை உள்ளதாகவும் மனோஜ் சிங்ஹா தெரிவித்தார்.
பட்ஜெட் கூட்டம்
2015ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டம் வருகிற பிப்.23ஆம் தேதி துவங்க உள்ளது.