டெல்லி: மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு நாட்டின் 8 முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போடுகிறது. இந்த ஏலத்திற்கு தொலைதொடர்பு நிறுவனங்கள் சுமார் 20,435 கோடி ரூபாயை முன்வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது.
8 நிறுவனங்கள்
இந்த ஏலத்தில் அம்பானி சகோதரர்கள் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் (முகேஷ் அம்பானி), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (அனில் அம்பானி), பார்தி ஏர்டெல், வோடாபோன், ஐடியா செல்லுலார், யூனிநார், டாடா டெலி சர்வீஸ், மற்றும் ஏர்டெல் ஆகிய 8 நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது. இதில் ரஷ்ய-இந்திய நிறுவனமான சிஸ்டமா-ஷியாம் நிறுவனம் வெளியேற்றப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி
முன்வைப்பு தொகை அளித்த நிறுவனங்களில் அதிகம் செலுத்தியது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் தான்.
பிற நிறுவனங்கள்
மேலும் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் ரூ. 4,500 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ. 1,175 கோடி, பார்தி ஏர்டெல் ரூ. 4,336 கோடி, ஐடியா செல்லுலர் ரூ. 4,000 கோடி, வோடபோன் ரூ. 3,700 கோடி, டாடா டெலிசர்வீசஸ் ரூ. 1,500 கோடி, யுனிநார் ரூ. 724 கோடி, ஏர்செல் ரூ. 500 கோடி செலுத்தியுள்ளன.
1 லட்சம் கோடி
மத்திய அரசின் இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் மூலம் சுமார் 1 இலட்சம் கோடி வரை நிதி திரட்ட முடியும். ஏலத்தில் போட்டி அதிகமாக இருப்பதால் இத்தொகை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
ஏர்டெல், வோடபோன்
ஏர்டெல், வோடபோன், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் லைசென்ஸ் 2015-16-ல் முடிகிறது. இதனால் போட்டு கடுமையாக உள்ளது.