டெல்லி: பன்னாட்டு நுகர்வோர் நிறுவனமான வால்மார்ட் இந்தியா தனது மொத்த விற்பனையை அதிகரிக்க பல திட்டங்களை தீட்டியுள்ளது, இதன் ஒரு பகுதியாக இந்நிறுவனத்தின் இணையதள சேவையை பஞ்சாப் மாநிலத்தின் இரு முக்கிய நகரங்களிலும் விரிவாக்கம் செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்தது.
மேலும் அடுத்த 5 வருடங்களில் இந்நிறுவனத்தின் கிளைகளை 20 என்ற எண்ணிக்கையில் இருந்து 70 ஆக உயர்த்த உள்ளதாக இந்நிறுவனதத்தின் துணை தலைவரான ராஜ்னேஷ் குமார் தெரிவித்தார்.
இந்தியாவில் இந்நிறுவனம் 2009ஆம் ஆண்டு சுனில் மிட்டலின் நிறுவனமான பார்தி ரீடைல் நிறுவனத்துடன் இணைந்து துவங்கியது, அதன் பின் 2013ஆம் ஆண்டு இந்நிறுவனத்துடனான இணைப்பை வால்மார்ட் முறித்துக்கொண்டு இந்தியாவி தனித்து செயல்பட்டு வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் அமிருதசரஸ், படிண்டா, ஜலந்தர், லூதியானா, ஜிரக்பூர் ஆகிய இடங்களில் மொத்த விலை விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இணையதள மூலமான விற்பனை சேவைகளைப் பொருத்த வரையில், லக்னோ, ஹைதராபாத், குண்டூர், விஜயவாடா, ராஜமண்ட்ரி ஆகிய இடங்களில் அளிக்கப்பட்டு வருகிறது.