வால்மார்ட் நிறுவனத்தின் புதிய வர்த்தக விரிவாக்க திட்டங்கள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பன்னாட்டு நுகர்வோர் நிறுவனமான வால்மார்ட் இந்தியா தனது மொத்த விற்பனையை அதிகரிக்க பல திட்டங்களை தீட்டியுள்ளது, இதன் ஒரு பகுதியாக இந்நிறுவனத்தின் இணையதள சேவையை பஞ்சாப் மாநிலத்தின் இரு முக்கிய நகரங்களிலும் விரிவாக்கம் செய்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்தது.

மேலும் அடுத்த 5 வருடங்களில் இந்நிறுவனத்தின் கிளைகளை 20 என்ற எண்ணிக்கையில் இருந்து 70 ஆக உயர்த்த உள்ளதாக இந்நிறுவனதத்தின் துணை தலைவரான ராஜ்னேஷ் குமார் தெரிவித்தார்.

வால்மார்ட் நிறுவனத்தின் புதிய வர்த்தக விரிவாக்க திட்டங்கள்!!

இந்தியாவில் இந்நிறுவனம் 2009ஆம் ஆண்டு சுனில் மிட்டலின் நிறுவனமான பார்தி ரீடைல் நிறுவனத்துடன் இணைந்து துவங்கியது, அதன் பின் 2013ஆம் ஆண்டு இந்நிறுவனத்துடனான இணைப்பை வால்மார்ட் முறித்துக்கொண்டு இந்தியாவி தனித்து செயல்பட்டு வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அமிருதசரஸ், படிண்டா, ஜலந்தர், லூதியானா, ஜிரக்பூர் ஆகிய இடங்களில் மொத்த விலை விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இணையதள மூலமான விற்பனை சேவைகளைப் பொருத்த வரையில், லக்னோ, ஹைதராபாத், குண்டூர், விஜயவாடா, ராஜமண்ட்ரி ஆகிய இடங்களில் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wal-Mart to Focus on Wholesale Business in India

-Wal-Mart Stores Inc. will focus on growing its wholesale business in India and is hopeful the government would relax foreign investment restrictions to attract global supermarket chains set up shop in the country, a senior executive said.
Story first published: Saturday, February 21, 2015, 14:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X