இந்திய பொருளாதாரத்தின் பிக் பேங் தியரி "பட்ஜெட் 2015"

டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உருவாக்க உள்ள 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். பிரதமர் மோடி அரசின் இரண்வது பட்ஜெட் அறிக்கையை பொருளாதாரா வல்லுனர்கள், இந்திய பொருளாதாரத்தின் பிக் பேங் தியரி என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.

இந்திய பொருளாதாரம் 1991ஆம் ஆண்டு கங்கிரஸ் ஆட்சியில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இதன் விழ்ச்சியில் இருந்து இந்தியா மீளவே சில வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால் தற்போது.....

10 சதவீத வளர்ச்சி

10 சதவீத வளர்ச்சி

ஆனால் தற்போது இந்திய பொருளாதாரத்திற்கு அனைத்தும் சாதகமாக உள்ள நிலையில் சரியான பட்ஜெட் திட்டத்தை கொண்டு இந்தியா அடுத்த ஒரு வருடத்தில் 10 சதவீதம் வரை வளர்ச்சி பெறும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம்

வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம்

1991ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் நாணய இருப்பு, பொருளாதாரத்தின் வடிவம், நடப்பு கணக்கு பற்றாக்குறை, எண்ணெய் விலை என அனைத்தும் இந்திய பொருளாதாரத்தின் 10% வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது.

திட்டங்கள்

திட்டங்கள்

இத்தகைய நிலையில் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் நாட்டின் உற்பத்தி அளவு, போட்டித் தன்மை, ஏற்றுமதி மற்றும் நாட்டின் வளர்ச்சி வகிதம் ஆகியவை அனைத்து உயரும்.

கட்டுமானம்

கட்டுமானம்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் கைகூடி வர நாட்டின் கட்டுமானத்தின் மிகப்பெரிய வளர்ச்சி அடையே வேண்டும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளது. இதே நேரத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும், பணவீக்கம் ஆகியவற்றை குறைக்க வேண்டும்.

முதலீடு

முதலீடு

மேலும் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் மத்திய அரசு இந்திய சந்தையில் அதிகாப்படியான முதலீட்டை குவித்து வரும் நிலையில், தனியார் துறை மற்றும் நிறுவனங்கள் மிகவும் குறைவான அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையை மாற்றவும் மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்த வேண்டும்.

நிதி திரட்டுதல்

நிதி திரட்டுதல்

நாட்டில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நிதிதிரட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு இருப்பை குறைத்து சுமார் 45,000 முதல் 50,000 கோடி ரூபாய் வரை நிதிதிரட்ட திட்டமிட்டுள்ளது.

மானியம்

மானியம்

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய மாணிய தொகை சுமார் 13 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி

மேலும் 2015-16ஆம் பட்ஜெட்டில் சரக்கு மற்றும் சேவை வரியை நாடாளுமன்றத்தில் அமல்படுத்த மத்திய அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் நடத்தி வருகிறது. மேலும் சேவை வரியை 14 சதவீதம் வரை உயர்ந்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+