மும்பை: நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில் ரயில்வே துறை பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள உள்நாட்டு ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டு சந்தையில் சரிவை சந்தித்துள்ளது.
இரண்டாவது நாள் சரிவு
சந்தையில் ரயில்வே துறை பங்குகள் கடந்த இரண்வாது நாளாக இன்றும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் டீடகார் வேகனஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த இரண்டு நாட்களில் 13.9 சதவீதம் சரிந்துள்ளது.
பிற நிறுவனங்கள்
டெக்ஸ்மேகோ ரயில் மற்றும் என்ஜினியரிங் லிமிடெட் 9.2% சரிவு, கெர்னெக்ஸ் மைக்ரோசிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் 8.8% சரிவு, கன்டைனர் கார்ப் ஆஃப் இந்தியா லிமிடெட் 1.8% சரிவு மற்றும் கலின்டி ரயில் நிர்மன் இன்ஜினியர்ஸ் லிமிடெட் 10.9% சரிவை சந்தித்துள்ளது.
சுரேஷ் பிரபு
மத்திய ரயில்வே துறை அமைச்சரான சுரேஷ் பிரபு மேற்கு இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் சிவசேனா கட்சியில் இருந்து விலகி, பிஜேபி கட்சியில் இணைந்தவர்.
அன்னிய முதலீடு
மேலும் 2015-16ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் இத்துறையில் அன்னிய முதலீடு மற்றும் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளை கவரம் திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.