எரிபொருள் விலை உயர்வு: விமான பயணக்கட்டணம் 500 ரூபாய் வரை உயரும்!!

டெல்லி: மத்திய அரசு கடந்த வாரம் விமான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்த்தியது. இதுக்குறித்து விமான போக்குவரத்து துறையின் வல்லுனரான ஹர்ஷவர்தன் கூறுகையில் விமான கட்டண குறைப்பிற்கு முக்கிய காரணமாக விளங்கும் விமான எரிபொருளின் விலையை மத்திய அரசு 8.2 சதவீதம் அதிகரித்ததை தொடர்ந்து விமான கட்டணம் ஒரு பயணிக்கு சுமார் 500 ரூபாய் வரை உயரும் என தெரிவித்தார்.

சேவை வரி

சேவை வரி

விமான எரிபொருள் விலை அதிகரித்தது மட்டும் அல்லாமல் மத்திய அரசு பிப்ரவரி 28ஆம் தேதி வெளியிட்ட மத்திய பட்ஜெட் அறிக்கையில் சேவை வரியை சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் விமான பயணிகளின் கட்டணத்தில் அதிகளவிலான உயர்வு ஏற்படும் எனவும், இத்துறை வளர்ச்சியில் இது மிகப்பெரிய தடையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விலை

எரிபொருள் விலை

விமான எரிபொருள் விலை உயர்வு சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இந்த 8.2 சதவீதம் உயர்விற்கு பிறகு டெல்லியில் ஒரு லிட்டர் விமான எரிபொருளின் விலை 50,363 ரூபாயாக உள்ளது.

40 சதவீத செலவீனம்

40 சதவீத செலவீனம்

இந்திய விமான சேவையில் 40 சதவீத செலவீனம் எரிபொருள் உட்கொள்ளுகிறது. இந்த உயர்வால் விமான கட்டணங்கள் நேரடியாக பாதிக்கும்.

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தை

மேலும் சர்வதேச சந்தையில் விமான கட்டணங்கள் அதிகரித்ததை தொடர்ந்து இந்தியாவில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அறிவிப்பை ஏற்று இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் சனிக்கிழமையே விலை உயர்வை அறிவித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+