கோயம்புத்தூர்: நாட்டின் பெரிய வாட்ச் தயாரிப்பு நிறுவனமான டைட்டன் நிறுவனம் கோயம்புத்தூரில் புதிதாக துவங்கியுள்ள தொழிற்சாலையில் வாட்ச் தயாரிப்புக்கான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உதிரிபாகங்களின் உற்பத்தியைத் துவங்கியுள்ளது.
இதன் மூலம் இப்பகுதியில் இந்நிறுவனத்தின் மூலம் சுமார் 500க்கும் மேற்ப்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டைட்டன் கம்பெனி
"டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த ஸ்டீல் உள்ளகங்களை (cases) தயாரிக்கும் பணியை கோயம்புத்தூரில் உள்ள சுமார் 75 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஆலையில் துவங்கியுள்ளது" என அந்த நிறுவனம் பங்குச் மும்பை பங்குச் சந்தை விவரப் பதிவில் தெரிவித்துள்ளது.
கோயம்புத்தூர் தொழிற்சாலை
11.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை 75 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் உள்ளகங்களை (cases) தயாரிக்கும் அளவை 2 மில்லியனாக உயர்த்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாட்ச் தயாரிப்பு
இந்த தொழிற்சாலையில் வாட்ச் தயாரிப்புக்கான ஸ்டீல் உள்ளகங்கள், அதற்கான உதிரிபாகங்கள் மற்றும் கருவிகள், பிரஸ் ஷாப், மெஷினிங், பாலிஷிங் மற்றும் அசெம்ப்ளி ஆகிய அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய உற்பத்தி மையமாகத் திகழ்வதுடன் இதர சேவைகளின் நிர்வாகம், பராமரிப்பு, உற்பத்திச் செலவுக் கணக்கு மற்றும் தரக் கட்டுப்பாட்டு மேலாண்மை ஆகியவற்றியும் உள்ளடகியிருக்கும்.
ஆறாவது இடம்
ஒசூர் உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் வட இந்தியாவில் மூன்று அசெம்ப்ளி தொழிலகங்களையும் கொண்டு உலக அளவில் வாட்ச் உற்பத்தி நிறுவனங்களில் ஆறாவது இடத்தில் டைட்டன் நிறுவனம் உள்ளது.
மேலாண்மை இயக்குனர்
இதுக்குறித்து இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பாஸ்கர் பட் கூறுகையில் டைட்டன் நிறுவனம் தன்னுடைய அனைத்து தொழில்களிலும் மிகவும் பெருமை கொள்ளத் தக்கவகையில் சேவைகளை வழங்குகிறோம். இந்த பயணத்தில் உலகத்தரம் வாய்ந்த ஸ்டீல் உள்ளகங்கள் தயாரிப்பு ஒரு முக்கிய அங்கம் என தெரிவித்தார்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications