மும்பை: பாரதி ஏர்டெல் சீன கைபேசி நிறுவனத்துடன் இணைந்து LTE எனப்படும் நீண்ட கால வளர்ச்சி திட்டம் மற்றும் மாறிவரும் கைபேசி தொழில்நுட்ப தரம் சார்ந்த திட்டங்களில் ஈடுப்பட உள்லதாக செவ்வாய்க் கிழமையன்று இந்நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
புரிந்துணர்வு பத்திரத்தில் சீன கைபேசி நிறுவனத்தின் தலைவர் Xi Guohua மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பாரதி மிட்டல் கையொப்பமிட்டனர்.
"உலகளவில் கைபேசி சந்தாதாரர்களில் மூன்று ஒரு பங்கு இந்திய மற்றும் சீன மக்களே, இந்த கூட்டு முயற்சி வருங்கால கைபேசி தொழில்நுட்ப நிலைகளுக்கும் 4G வளர்ச்சி மற்றும் பயன்பாட்டிற்கு முக்கிய வழி வகுக்கும் ஏனெனில் இரு நாடுகளும் அபரிவிதமான தகவல் வளர்ச்சியை நோக்கிச் செல்கின்றன", என்று மிட்டல் கூறினார்.
சீன கைபேசி மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் உலக TD-LTE (நேரப்பிரிவு-நீண்ட கால வளர்ச்சி) முன்முயற்சியின் வித்திட்டவர்களில் இவர்களும் ஒருவர்.
மேலும், சீன கைபேசி மற்றும் ஏர்டெல் ஒத்துழைப்பில், பொருட்கள் மற்றும் அதன் தரத்தின் வளர்ச்சி மற்றும் TD -LTE முறையை வணிகப்படுத்த சிறந்த சூழல் அமைத்தல், 4.5G / 5G தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் ஈடுபடும் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.
ஏர்டெல்லும் சீன கைபேசியும் Mifi, ஸ்மார்ட் போன், டேட்டா கார்டு, LTE CPE மற்றும் USIM களின் வளர்ச்சியில் ஈடுபடும்.