மும்பை: நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பு பிப்ரவரி 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மட்டும் 3.88 பில்லியன் டாலர் அளவு உயர்ந்து 338.07 பில்லியன் டாலராக அளவை எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பிப்ரவரி 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வெறும் 1.02 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது. பிப்ரவரி 28ஆம் தேதி பட்ஜெட் வெளியிட்டை எதிர்பார்த்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்தனர்.
இதன் மூலம் அன்னியச் செலாவணி இருப்பு சந்தையில் முதலீட்டின் அளவு அதிகளவில் உயர்ந்தது. மேலும் அன்னியச் செலாவணி இருப்பில் நாணய இருப்பு சந்தை மிகப்பெரிய பங்கு வகுக்கிறது. மேலும் இக்காலகட்டத்தில் நாணய இருப்பு சந்தையின் அளவு 3.90 பில்லியன் டாலர் வரை உயர்ந்தது.
மேலும் தங்க இருப்பு அளவு மிகவும் குறைவான அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது. இதன் மூலம் இக்காலகட்டத்தில் தங்க இருப்பு அளவு 805.3 மில்லியன் டாலர் அளவு உயர்ந்தது 20.18 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியுள்ளது.