டெல்லி: மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் நடத்தி வரும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சனிக்கிழமையுடன் முடிவடைந்த 24 சுற்றுகளில் மத்திய அரசு சுமார் 86,000 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
இத்தொகை மத்திய அரசின் கணிப்புகளை விட சுமார் 4,000 கோடி ரூபாய் அதிகமாகும். தொலைதொடர்பு நிறுவனங்களிடையே உள்ள அதிகப்படியான போட்டியின் காரணமாக இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரூ.1 லட்சம் கோடி வரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு மாநிலங்கள்
மத்திய பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 900 MHz பேண்ட் அலைகற்றைகளின் விலை கடந்த 4 நாள் ஏலத்தில் சுமார் 17 சதவீசதம் அளவில் உயர்ந்ததுள்ளது.
800 MHz அலைகற்றை
கடந்த வார புதன்கிழமை துவங்கிய ஏலத்தில் 800 MHz பேண்ட் அலைகற்றை மீதான ஏலத்தில் மந்த நிலை நிலவியது. ஆனால் 4வது நாள் துவக்கத்தில் சூடுப்பிடிக்க துவங்கியது. மேலும் 2,100MHz அலைகற்றை இதுவரை எந்த ஒரு நிறுவனமும் ஏலத்தில் எடுக்கவில்லை என மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போட்டி
மேலும் இந்த ஏலத்தில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் கடுமையாக போட்டிப்போட்டு வருகிறது. இதன் மூலம் இந்த ஏலத்தில் கிடைக்கப்பெறும் தொகையில் 50% தொகை இந்த இரண்டு நிறுவனங்களுடையதாக இருக்கும் என ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
விலை உயர்வு
மார்ச் 4ஆம் தேதி முதல் துவங்கிய ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முடிவில் வாடிக்கையாளர்களின் கட்டணத்தில் 15% வரை உயர்வை எதிர்பார்க்கலாம் என தொலைதொடர்புத் துறை வல்லுனர் கிருஷ்ண குமார் தெரிவித்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications