டெல்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் அல்ட்ரா ரிச் பணக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 2014ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 1,652 ஆக உயர்ந்துள்ளதாக Knight Frank நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை 104 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை 3,371 ஆக உயரும் எனவும் இந்நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முழு வேகத்தில் இந்தியா
இதுக்குறித்து Knight Frank நிறுவனத்தின் இந்திய கிளையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிசிர் பால்ஜெய் கூறுகையில், 2014ஆம் ஆண்டு துவக்கம் முதல் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் அன்னிய முதலீட்டின் அளவும் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.
மும்பை
இந்தியாவில் இருக்கும் 1,652 பெரும் பணக்காரர்களில் 50 சதவீதம் பேர் மும்பையில் தான் உள்ளனர். இதன் மூலம் மும்பை இந்தியாவின் நிதி தலைநகராக தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உலகில் அதிக பில்லியனர்கள் வாழும் நகரங்களில் மும்பை 6வது இடத்தில் உள்ளது.
டெல்லி மற்றும் ஹைதராபாத்
மும்பைக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் அதிக பில்லியனர்களை கொண்ட நகரங்களில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அடுத்தடுத்து இடங்களை பிடித்துள்ளது.
பிற நகரங்கள்
மும்பையை தொடர்ந்து நியூயார்க் 114 பில்லியனர்களுடன் முதல் இடத்திலும், 91 பில்லியனர்களுடன் மாஸ்கோ 2வது இடத்தில் உள்ளது.
டாப் 3 இடங்கள்
இப்பட்டியலில் அதிகளவிலான பில்லியனர்கள் கொண்ட நாடுகளில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் டாப் 3 இடங்களை பிடித்துள்ளது.
ரியல் எஸ்டேட்
மேலும் இந்த ஆய்வறிக்கையில் ரியல் எஸ்டேட் துறையில் துபாயை விடவும் விலை உயர்ந்ததாக மும்மை விளங்குவதாக தெரிவித்துள்ளது. மும்பையில் முக்கிய பகுதியில் ஒரு சதுரடியின் விலை 61,300 ரூபாய், துபாயில் 40,455 ரூபாயாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications