டெல்லி: இந்திய ரயில்வே துறையை நவீனமையமாக்கவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், அடுத்த 5 வருடத்தில் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக திகழும் எல்.ஜ.சி நிறுவனம் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முதலீட்டு திட்டம் 2015ஆம் நிதியாண்டில் துவங்கும் எனவும், ரயில்வே துறையின் கிளை நிறுவனமான இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் (IRFC) நிறுவனத்தின் பெயரில் பத்திர வடிவில் முதலீடு செய்யப்படும் என எல்.ஜ.சி தெரிவித்துள்ளது.
ஒப்பந்தம்
இந்த முதலீட்டு திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் எல்ஜசி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கையெழுத்திட்டனர். இந்நிலையில் இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில் இந்த முதலீட்டு திட்டம் இரண்டு நிறுவனங்களுக்குமே வெற்றியையும் லாபத்தையும் தேடித் தரும் என தெரிவித்தார்.
நிதி நெருக்கடி
இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் நிதிநெருக்கடியில் தவிக்கும் நிலையில் இத்துறை நவீனமையமாகவும், மேம்படுத்த எல்.ஐ.சி நிறுவனம் கைகொடுத்துள்ளது. மேலும் இத்துறை வளர்ச்சிக்கு இந்த நிதியுதவி மிகப்பெரிய உந்து சக்தியாக விளங்கும்.
விரைவுப்படுத்ததுதல்
இந்நிலையில் ரயில்வே துறையில் முழுமையாக திட்டமிடப்பட்டு முடங்கிக்கிடக்கும் அனைத்து முக்கிய திட்டங்களும் நிதியுதவின் காரணமாக விரைவுப்படுத்தப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
பட்ஜெட் அறிக்கை
மேலும் பிப்ரவரி 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட் அறிக்கையில் இத்துறை அமைச்சர் 2015-16ஆம் நிதியாண்டில் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதித்தேவை உள்ளதாக தெரிவித்தார். தற்போது எல்.ஜ.சி நிறுவனம் வருடத்திற்கு 30,000 கோடி ரூபாய் பத்திர வடிவில் அடுத்த 5 வருடத்திற்கு அளிக்க உள்ளது. மீதமுள்ள 70,000 கோடி நிதியை திரட்ட ரயில்வே துறை அமைச்சகம் முயற்சி செய்து வருகிறது.