7வது நாள் முடிவில் ரூ.96,000 கோடியை எட்டிய ஸ்பெக்ட்ரம் ஏலம்!!

டெல்லி: மத்திய தொலைதொடர்பு அமைச்சகம் நடத்தி வரும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களின் அதிரடியான ஏலத்தின் எதிரொலியாக ஏலத்தொகை சுமார் 96,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

மேலும் கடந்த 7 நாட்களில் 43 சுற்றுகளில் 2100 MHz, 1800 MHz, 900 MHz மற்றும் 800 MHz பேண்ட் அலைகற்றைகளை ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்களின் இக்கட்டாண சூழ்நிலையின் காரணமாக மத்திய அரசு கணிப்புகளான 82,000 கோடி ரூபாய் அளவை விட 96,000 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

7வது நாள் முடிவில் ரூ.96,000 கோடியை எட்டிய ஸ்பெக்ட்ரம் ஏலம்!!

இதுவரை 84 சதவீத அலைகற்றைகளை தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று நடக்க இருக்கும் 6 சுற்றுகளில் மீதமுள்ள 16 சதவீத அலைகற்றைகள் ஏலம் விடப்பட்டது. இதற்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை காலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 8 நாள் ஏலத்தில் நாட்டின் மூன்று முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் சேவையை நிலைநிறுத்திக்கொள்ள ஆர்வமாகவும் அதிக தொகையுடன் ஏல விண்ணப்பம் செய்தது. இதுவே மத்திய அரசு கணிப்புகள் உயர்ந்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+