டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கிய முதல் 9 நாட்களில் ரூ 1.01 கோடி வருவாயை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஈட்டியுள்ளது.
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கியது. முதல் 9 நாட்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ 1 லட்சம் கோடிக்கு மேல் ஏலத் தொகை குவிந்துள்ளது.
இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முந்தைய கணிப்புகளில் மத்திய அரசு ரூ 82,000 கோடி வரை நிதி திரட்ட முடியும் எனக் கூறப்பட்டது. இந்த கணிப்பை மிஞ்சும் வகையில் ஏலத் தொகை குவிகிறது.
55 சுற்றுகள்
வெள்ளிக்கிழமை வரையிலான ஏல முடிவில், 55 சுற்றுகளின் மூலம் 87 சதவீத அலைக்கற்றைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அலைகற்றைகளை சனிக்கிழமை நடக்க உள்ள 6 சுற்றுகளில் ஏலம் விட திட்டமிட்டுள்ளனர்.
போட்டி
இந்த ஏலத்தில் 900 MHz அலைகற்றைக்கு செல்போன் சேவை நிறுவனங்களுக்கிடையே அதிக போட்டி இருந்தது. இதனால் 900MHz பேண்ட் அலைகற்றையில் ஒரு 1MHz க்கு 3,980 கோடி ரூபாய் என்று அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட சுமார் 78.2 சதவீதம் கூடுதலாகக் கிடைத்துள்ளது.
உரிமத்தின் கால நீட்டிப்பு
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அலைக் கற்றை உரிம காலத்தை 20 வருடங்களுக்கு அதிகமாக நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் சேவையை நிலை நாட்டிக்கொள்ள ஏலத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.
முக்கிய நிறுவனங்கள்
நாட்டின் முக்கிய நிறுவனங்களாக கருதப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்களின் உரிமங்கள் காலாவதியாகும் நேரம் நெருங்கியுள்ளதால், இந்நிறுவனங்கள் மத்தியில் அதிகளவில் போட்டி நிலவுகிறது. 78.2 சதவீத விலை உயர்விற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
1.06 லட்சம் கோடி ரூபாய்!
மொத்த ஏல முடிவில் மத்திய அரசு சுமார் 1.06 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி திரட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications