டெல்லி: இந்திய ரயில்வே துறை 2015ஆம் நிதியாண்டில் ரூ.50,000 கோடி வருமானத்தை பெற திட்டமிட்டு வரும் நிலையில், ரயிலில் டிக்கெட் பெறாமல் வித்அவுட்-இல் பயணம் செய்யும் மக்களின் மூலம் மத்திய அரசு சுமார் ரூ.2,000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
2015-16ஆம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் அறிக்கையில், இத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில் கட்டணங்களை உயர்த்தவில்லை. இதனால் சமானிய மக்கள் மத்தியில் ரயில்வே பட்ஜெட் பெரும் வரவேற்பை பெற்றது.
ரயில் டிக்கெட்
பயணிகள் ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதாலும், சரியான டிக்கெட் எடுக்காமல் அதிக தூரத்திற்கு பயணம் செய்வதாலும் ரயில்வே துறைக்கு கடந்த 4 வருடங்களில் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இத்துறை தெரிவித்துள்ளதாக இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் கூறுகிறது.
சராசரி விகிதம் அதிகரிப்பு
2000-01ஆம் நிதியாண்டில் தலைக்கு 10 பைசாவாக இருந்த நஷ்ட விகிதம், 2012-13ஆம் ஆண்டு காலகட்டத்தில் 23 பைசாவாக உயர்ந்துள்ளது என ரயில்வே துறை வருத்தம் தெரிவித்துள்ளது.
4.5 கோடி மக்கள்
அர்ஜென்டீனா நாட்டின் மக்கள் தொகையை விட அதிகளவிலான இந்திய மக்கள், ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து வருவதாக புள்ளிவிபரம் கூறுகிறது. கடந்த 4 வருட காலகட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 4.5 கோடி மக்களின் மூலம் 1,915 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பயணிகள்
2013-14ஆம் ஆண்டு காலகட்டத்தில் வடக்கு மண்டல பகுதியில் சுமார் 1.9 மில்லியன் மக்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளதாகவும், மத்திய மண்டல பகுதியில் 84 கோடி ரூபாய் அதிகப்படியான நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications