டெல்லி: இந்திய ரயில்வே துறை 2015ஆம் நிதியாண்டில் ரூ.50,000 கோடி வருமானத்தை பெற திட்டமிட்டு வரும் நிலையில், ரயிலில் டிக்கெட் பெறாமல் வித்அவுட்-இல் பயணம் செய்யும் மக்களின் மூலம் மத்திய அரசு சுமார் ரூ.2,000 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.
2015-16ஆம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட் அறிக்கையில், இத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில் கட்டணங்களை உயர்த்தவில்லை. இதனால் சமானிய மக்கள் மத்தியில் ரயில்வே பட்ஜெட் பெரும் வரவேற்பை பெற்றது.
ரயில் டிக்கெட்
பயணிகள் ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதாலும், சரியான டிக்கெட் எடுக்காமல் அதிக தூரத்திற்கு பயணம் செய்வதாலும் ரயில்வே துறைக்கு கடந்த 4 வருடங்களில் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இத்துறை தெரிவித்துள்ளதாக இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் கூறுகிறது.
சராசரி விகிதம் அதிகரிப்பு
2000-01ஆம் நிதியாண்டில் தலைக்கு 10 பைசாவாக இருந்த நஷ்ட விகிதம், 2012-13ஆம் ஆண்டு காலகட்டத்தில் 23 பைசாவாக உயர்ந்துள்ளது என ரயில்வே துறை வருத்தம் தெரிவித்துள்ளது.
4.5 கோடி மக்கள்
அர்ஜென்டீனா நாட்டின் மக்கள் தொகையை விட அதிகளவிலான இந்திய மக்கள், ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து வருவதாக புள்ளிவிபரம் கூறுகிறது. கடந்த 4 வருட காலகட்டத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 4.5 கோடி மக்களின் மூலம் 1,915 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பயணிகள்
2013-14ஆம் ஆண்டு காலகட்டத்தில் வடக்கு மண்டல பகுதியில் சுமார் 1.9 மில்லியன் மக்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்துள்ளதாகவும், மத்திய மண்டல பகுதியில் 84 கோடி ரூபாய் அதிகப்படியான நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் இந்தியா ஸ்பென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications