சென்னை: கடந்த 10 வருடங்களில், இந்திய சந்தையில் ஆடம்பர பொருட்களின் விற்பனை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இதில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் ஆடம்பர காலணிகள் முதல் கார்கள் வரை அனைத்தும் அடங்கும்.
ஆடம்பர பொருடகளின் மீது, அதிகம் நாட்டம் இல்லாமலிருந்த இந்திய மக்கள், தற்போது அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 2007ஆம் ஆண்டு துவக்கம் முதல் இன்று வரை, இந்தியாவில் ஆடம்பர கார்களின் விற்பனை 8 மடங்கு உயர்ந்துள்ளது.
ஆடம்பர கார் விற்பனை
இந்திய சந்தையில் 2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் வெறும் 4,000 ஆடம்பர கார்களை் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2014ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 33,000 ஆக உயர்ந்துள்ளது.
பிற நாடுகள்
வல்லரசு நாடுகளைக் காட்டிலும் வளர்ந்து வரும் நாடுகளில் ஆடம்பர கார்களின் விற்பனை அதிகளவில் உள்ளதாது. இந்தியாவை போல் பிரேசில், மெக்சிக்கோ, மற்றும் ரஷ்யாவும் ஆடம்பர கார் விற்பனையில் முன்னோடியாக உள்ளது.
இந்திய சந்தை
இந்தியாவில் பன்னாட்டு கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆடி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள், 2014ஆம் ஆண்டில் விற்பனையில் இரண்டு இலக்க வளர்ச்சியை அடைந்துள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் விற்பனையை விரிவாக்க ரூ.1,000 கோடி முதலீடும், தனது தொழிற்சாலையில் உற்பத்தி அளவை 20,000 கார்கள் வரை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில், இந்தியாவில் ஆடம்பர கார்களின் விற்பனை 1,00,000 வரை உயரும் என இந்நிறுவனத்தின் தலைவர் எபர்ஹார்ட் கெர்ன் தெரிவிதார்.
பிற நிறுவனங்கள்
பென்ஸ் நிறுவனத்தை போல ஆடி, BMW, ஜாகுவார் போன்ற நிறுவனங்கள் இந்திய சந்தையை குறிவைத்து கோடிக்கனக்கான பணத்தை முதலீடு செய்து தனது விற்பனை கிளைகளை விரிவாக்கம் செய்து வருகிறது.