டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும் மத்தியில் கடுமையான போட்டி நிலவியதால், மத்திய அரசு எதிர்ப்பார்த்ததை விட அதிக ஏலத் தொகை கிடைத்துள்ளது.
இந்த அதிகப்படியான முதலீட்டை சரி செய்ய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளன.
அடுத்த சில மாதங்களில் மொபைல் கட்டணத்தை 15 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
நிறுவனங்களுக்கு மத்தியில் போட்டி அதிகரித்ததால் ஸ்பெக்ட்ரம் ஏலத் தொகை மத்திய அரசின் கணிப்பான ரூ.82,000 கோடி என்ற அளவைத் தாண்டி 1.09 இலட்சம் கோடியை எட்டியுள்ளது. இதனால் நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
முதலீடு அதிகரிப்பு
ஏலத்தில் தங்களின் முதலீடு அதிகரித்ததால் நிதிநிலையைச் சரி செய்ய வாடிக்கையாளர்களின் தலையில் கை வைக்கப் போகின்றன செல்போன் சேவை நிறுவனங்கள்.
இதற்காக இந்த நிறுவனங்கள் தற்போது ஒரு நிமிடத்துக்குப் பெறும் வருவாயான 40-41 பைசாவை, 45 பைசாவாக உயர்த்தப் போகின்றன.
கட்டண உயர்வு உறுதி
அடுத்த சில மாதங்களிலேயே இந்த கட்டண உயர்வு உறுதியாக என முன்னணி தொலைதொடர்பு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1.05 இலட்சம் கோடி
வெள்ளிக்கிழமை வரை நடந்த 92 சுற்று ஸ்பைக்ட்ரம் ஏல முடிவில் மத்திய அரசுக்கு சுமார் 1.05 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது.