மும்பை: மார்ச் 13ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு 2.06 பில்லியன் டாலர் குறைந்து 335.72 பில்லியன் டாலர் அளவை எட்டியது.
சர்வதேச சந்தையில் டாலருக்கு எதிரான யூரோ மற்றும் யென் மதிப்பு 12 வருட சரிவை எட்டியதால், பிற நாடுகள் தங்களின் நாணய மதிப்பு சரிவை மீட்க இந்திய சந்தையில் தங்களது இருப்பைக் குறைத்துக் கொண்டனர்.
ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் படி மார்ச் 13ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் நாட்டின் நாணய இருப்பு 2.06 பில்லியன் டாலர் குறைந்து 335.72 பில்லியன் டாலராக குறைந்ததுள்ளது. இதே காலகட்டத்தில் தான் மும்பை பங்குச் சந்தை அதிகளவிலான சரிவை எட்டியது.
இந்திய சந்தையில் மொத்த நாணய இருப்பில், 20-25 சதவீத அளவு டாலர் அல்லாத நாணய சொத்துக்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.