நவம்பர் முதல் பறக்க தயாராகும் "ஏர் கேரளா"

கொச்சி: கொச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய விமான போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் கேரளா தனது முதல் பயணத்தை நவம்பர் மாதம் துவங்க உள்ளது.

மாநில அரசின் நிதி உதவியுடன் 19 இருக்கைகள் கொண்ட விமானத்தின் மூலம் உள்ளாட்டு சேவையை அளிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

முன்று இடங்கள்

முன்று இடங்கள்

முதல் கட்டமாக ஏர் கேரளா நிறுவனம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு கோயம்புத்தூர், மங்களூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவை அளிக்க உள்ளது.

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகள்

2017ஆம் ஆண்டில் இதன் சேவை வளைகுடா நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.6 கோடி நஷ்டம்

ரூ.6 கோடி நஷ்டம்

முதல் வருடத்தில் இந்நிறுவனம் அதிகளவிலான நஷ்டத்தை சந்திக்க கூடாது என இந்நிறுவனம் முன்று இடங்களுக்கு மட்டும் தனது சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளது. எனவே முதல் வருடத்தில் 6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என இந்நிறுவனம் முன்கூட்டியே தெரிவித்துள்ளது.

30% வரி

30% வரி

மாநில அரசு விமான எரிபொருள் மீது விதக்கப்படும் 30 சதவீத வரியை குறைக்க இந்நிறுவனம் வேண்டியுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்

இந்நிறுவனத்தின் விமான சேவையை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த இம்மாநிலத்தின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை ஏர் கேரளாவில் பயணிக்க இந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+