பெங்களுரூ: ஐகேட் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் சீஇஓ பனிஷ் மூர்த்தி, பிஎம் ஹெல்த் அண்ட் லைப் கேர் என்னும் ஹெல்த்கேர் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
பனீஷ் மூர்த்தி
ஐகேட் நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் உட்பட 5 பேர் இணைந்து இந்த நிறுவனத்தை துவங்கியுள்ளனர். இந்நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பனீஷ் மூர்த்தி பணியாற்றுகிறார்.
இணைப்பு
சுகாதாரத் துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வரப்போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் சுகாதார சேவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மருத்துவமனை, டாக்டர்கள், மருந்தாளர்களுடன் வாடிக்கையாளரும் இணைக்கப்பட்ட உள்ளனர்.
முதலீடு
இந்நிறுவனம் முழுமையாக செயல்படும் முன்னரே பிஎம் வென்சர்ஸ் மூலம் 3.2 மில்லியன் டாலர் முதலீடு கிடைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் சிஎஸ்எஸ் கார்ப், ஒபஸ் குரூப் நிறுவன தலைவர்களிடம் இருந்தும் முதலீடு கிடைக்கப்பெற்றுள்ளது.
பிஎம் ஹெல்த் அண்ட் லைப் கேர்
கடந்த ஒரு வருடமாக செய்திகளில் இடம்பெறாத மூர்த்தி, புதிய சுகாதார நிறுவனத்தை துவங்கியதன் பேரில் மீண்டும் செய்திகளில் இடம்பெற்றுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு
ஐடித்துறையில் முன்னணி நிறுவனமான ஐகேட் நிறுவன3த்தின் தலைமை செயல் அதிகாரி பனீஷ் மூர்த்தியின் மீது இந்நிறுவன பெண் ஊழியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இக்குற்றச்சாட்டின்பேரில்தான் நிறுவனத்தில் இருந்து மூர்த்தி நீக்கப்பட்டார்.
ஐகேட்
இந்நிறுவனத்தில் இருந்து பனீஷ் மூர்த்தி வெளியேற்றிய பின்பு இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் மட்ட குழுவில் இருந்து விலகிய அசோக் வெமுரி அவர்களை இந்நிறுவனத்தின் சீஇஓ-வாக நியமிக்கப்பாட்டார்.