சென்செக்ஸ்... இன்னிக்கு டல்தான்... ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லே!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 2014ஆம் நிதியாண்டின் கடைசி வர்த்தக நாள் நெருங்கும் நிலையில் இந்திய சந்தையில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை.

இத்தனைக்கும் அதிகளவிலான அன்னிய முதலீடுகள், ஆசிய சந்தையில் சிறப்பான வர்த்தகம் நிலவினாலும், பங்குச் சந்தை நிலவரம் இன்று டல்தான்.

மார்ச் மாத பங்கு ஒப்பந்தங்கள் வருகிற வியாழக்கிழமை காலாவதியாகும் என்பதால்தான் இந்த சுமாரான வளர்ச்சி.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

புதன்கிழமை வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்களின் ஈடுப்பாடு அதிகளவில் இல்லை. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 87 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தக துவக்கத்தில் உயர்வை சந்தித்தாலும் வர்த்தக முடிவில் சரிவு ஏற்பட்டது. .

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை, இதனால் சென்செக்ஸ் குறியீடு 87 புள்ளிகள் மட்டுமே உயர்ந்ததுள்ளது. இந்நிலையில் 12 மணியளவில் சென்செக்ஸ் 28 புள்ளிகள் உயர்ந்து 28,189.07 புள்ளிகளை எட்டியுள்ளது.

நிஃப்டி

நிஃப்டி

சென்செக்ஸ் குறியீட்டைப் போலவே நிஃப்டியும் மிகவும் குறைந்த அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. புதன்கிழமை வர்த்தகத்தில் 3.65 புள்ளிகள் உயர்ந்து 8,546.60 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

முக்கிய துறைகள்

முக்கிய துறைகள்

சகாதார துறை, ஐடி, மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் இன்று அதிகளவிலான உயர்வை எட்டியுள்ளது.

உலக சந்தைகள்

உலக சந்தைகள்

ஜாப்பான் நிக்கி குறியீடு 0.09 சதவீத உயர்வும், ஹாங்காங் சந்தை 0.40 சதவீத உயர்வும் கண்டுள்ளன. சீன வளர்ச்சி குறித்து ஆசிய வளர்ச்சி வங்கியின் அளித்த அறிக்கை இந்நாட்டு சந்தையை பாதித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சீன பங்குச்சந்தை 0.89 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

லாபமடைந்த நிறுவனங்கள்

லாபமடைந்த நிறுவனங்கள்

இன்றைய வத்தகத்தில் சன் பார்மா, டாக்டர் ரெட்டி, சிப்லா, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற நிறுவனங்கள் உயர்வை சந்தித்துள்ளது.

நஷ்டமடைந்த நிறுவனங்கள்

நஷ்டமடைந்த நிறுவனங்கள்

அரசு துறை நிறுவனங்களான கெயில், என்டிபிசி, கோல் இந்தியா, ஓஎன்ஜிசி, பெல் போன்ற நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்தள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex rises 87 points ahead of March derivatives expiry

The benchmark BSE sensex rose over 87 points in early trade today as stocks of healthcare, IT and realty sectors saw heavy buying on covering-up of short positions by speculators ahead of tomorrow's monthly expiry in derivatives segment amid a mixed trend at other Asian bourses.
Story first published: Wednesday, March 25, 2015, 12:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X